வீட்டிற்கு செல்ல மாட்டோம்...அக்டோபர் 2 வரை தான்...அரசுக்கு கெடு வைத்த விவசாய சங்கங்கள்
டெல்லி : வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அக்டோபர் 2 வரை தான் மத்திய அரசுக்கு அவகாசம் என பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 75 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றுமையை காட்டவும், போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கவும் இன்று நாளு தழுவிய 3 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தின் போது டெல்லி-உத்திரபிரதேச எல்லையான காசிபூரில் போராட்டக்காரர்கள் இடையே ராகேஷ் திகைத் பேசினார். அப்போது அவர், நமத கோரிக்கைகள் நிறைவேறும் வரை யாரும் வீட்டிற்கு திரும்பக் கூடாது. பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்கவும் யாரும் மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டாம்.
இந்த போராட்டம் அக்டோபர் 2 வரை நீடிக்கும். அது வரை தான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசுக்கு அவகாசம். அப்படியம் திரும்பப் பெறாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விவசாய சங்கங்கள் திட்டமிடுவோம். பேச்சுவார்த்தை விவகாரத்தில் நாங்கள் அரசுக்கு அழுத்தம் தர மாட்டோம் என்றார்.
இன்று சாலை மறியல் போராட்டத்தை துவங்குவதற்கு முன், போலீசார் தடுப்புக்கள் அமைத்துள்ள இடத்திற்கு அருகே ராகேஷ், மலர் செடிகளை நட்டார். அவர்கள் நகங்களை வைத்தால் நாங்கள் மலர்களை வளர்ப்போம் என்றார். விவசாயிகள் - மத்திய அரசு இடையேயான இந்த உறவு நீண்ட காலம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் அறிவித்தது போலவே உ.பி., உத்திரகாண்ட். டெல்லி தவிர்த்து பஞ்சாப்பின் 15 மாவட்டங்களில் 33 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதிக அளவிலான டிராக்டர்கள் சாலைகளை ஆக்ரமித்து நின்றன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications