தேசியத்தை வலுப்படுத்துவோம்.. சமஸ்கிருதத்தை வளர்ப்போம்.. அறிக்கையை வெளியிட்டு மோடி பேச்சு!
தேசியவாத கொள்கைகளை நாம் வலுப்படுத்த வேண்டும், சமஸ்கிருதத்தை நாடு முழுக்க வளர்க்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: தேசியவாத கொள்கைகளை நாம் வலுப்படுத்த வேண்டும், சமஸ்கிருதத்தை நாடு முழுக்க வளர்க்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
இன்று காலை லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி டெல்லியில் வெளியிட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பிரதமர் மோடி பேசினார். பாஜகவின் குறிக்கோள் குறித்தும் வாக்குறுதி குறித்தும் அவர் பேசினார்.

மோடி பேச்சு
மோடி தனது பேச்சில், எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மிக்க நன்றி. எங்கள் தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கிறது சரியான நேர இடைவெளியில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ''ஒரே கோரிக்கை-ஒரே வழி'' என்பதுதான் எங்கள் வாக்குறுதியின் நோக்கம்.

தேர்தல் அறிக்கை
இந்த தேர்தல் அறிக்கையை நாங்கள் 3 மாதம் கஷ்டப்பட்டு கொண்டு வந்தோம். எல்லோரும்தான் தேர்தல் அறிக்கையை கொண்டு வருகிறார்கள். ஆனால் இது அப்படி ஒரு அறிக்கை கிடையாது. இது எங்களை ஆட்சியில் தொடர வைக்கும் அறிக்கை.

சமஸ்கிருத முன்னேற்றம்
பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிப்போம். சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கான திட்டங்கள் கொண்டு வரப்படும். சபரிமலை பாரம்பரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம். சபரிமலை பாரம்பரியத்தை காப்போம்.

தண்ணீர் பிரச்சனை
அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும். இப்போது தண்ணீர்தான் பிரச்சனை. நல் சே ஜல் திட்டத்தின் கீழ் 2024க்குள் அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீர் வழங்கப்படும். நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

ஊழல் எப்படி
ஊழலுக்கு எதிராக நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டில் ஊழல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் தொழில்நுட்பத்தில் நாம் அசாத்திய வளர்ச்சியை அடைந்து இருக்கிறோம்.

தேசியவாதம்
தேசியவாதம்தான் நமது குறிக்கோள். தேசியத்தை வளர்க்க வேண்டும். கீழ் உள்ள மக்களை நாம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுதான் நமது மந்திரம். நாம் பல படிகளில் உழைத்தால்தான் சரியான முன்னேற்றத்தை அடைய முடியும். அதற்கு இந்த தேர்தல் வாக்குறுதி உதவும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications