நீதியை காக்கவில்லை என்றால்.. நிலைமை மோசமாகிவிடும்.. அர்னாப் வழக்கில் கொந்தளித்த உச்ச நீதிமன்றம்!
டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை ஹைகோர்ட் பெயில் வழங்காதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட மஹாராஷ்ட்ராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். அன்வே நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் மறுத்துள்ளது. இந்த நிலையில் மும்பை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக அர்னாப் கோஸ்வாமி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது.

விசாரணை
இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மஹாராஷ்டிரா போலீஸ் மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி சந்திரசூட் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்தும், அர்னாப் கோஸ்வாமிக்கு பெயில் வழங்காததை கண்டித்தும் சந்திரசூட் பேசி இருந்தார்.

சந்திரசூட்
சந்திரசூட் பேசுகையில், நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் மீது எப்படி வழக்கு பதிவு செய்தனர். ஒரு நபர் இன்னொரு நபருக்கு கடன் கொடுக்கிறார்.. திடீரென கடன் கொடுத்த நபர் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்கிறார் என்றால்.. கடன் வாங்கிய நபர் மீது எப்படி குற்றச்சாட்டு வைக்க முடியும்? ஏ என்ற நபர் பி என்ற நபரிடம் கடன் வாங்கி உள்ளார்.

தற்கொலை
இப்போது பி என்ற நபர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஏ என்ற நபர் எப்படி பொறுப்பாக முடியும்? என்று சந்திரசூட் கேட்டுள்ளார். நாயக்கை அர்னாப் தற்கொலைக்கு தூண்டியதற்கான சாத்திய கூறு இதில் எங்கே இருக்கிறது. நாயக் தற்கொலை செய்து கொண்டார், அது பணத்தட்டுப்பாடு காரணமாக.. இதில் அர்னாப்பை ஏன் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

நீதிமன்றம்
இதில் முதல் தகவல் அறிக்கையே முழுமையாக பதிவு செய்யபடவில்லை. அப்படி இருக்கும் போது.. பெயில் கொடுக்காமல் இருப்பதில் என்ன அர்த்தம் என்று சந்திரசூட் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த நேரத்தில் நாங்கள் அதிரடியாக செயல்பட்டு சட்டத்தை காப்பாற்றவில்லை என்றால்.. வேறு யார் காப்பாற்றுவார்கள்.?
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications