பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக கொண்டு வரப்படும்.. பாஜக அதிரடி அறிவிப்பு!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. தேசிய பாதுகாப்பிற்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்படும். பெண்களுக்கான நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் 33% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும்.
இது பெண்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். பெண்களின் முன்னேற்றத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கை மிக பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தும் என்று பாஜக கூறியுள்ளது.
காங்கிரஸ், திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதே அறிவிப்பு இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications