தீவிரவாதத்திற்கு எதிராக செயலாற்றுவோம்.. இந்தியாவிற்கு கை கொடுக்கும் சவுதி.. சல்மான் அதிரடி!
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சவுதி அரேபியா துணையாக இருக்கும் என்று சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சவுதி அரேபியா துணையாக இருக்கும் என்று சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியை சந்தித்த அவர் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மா முன்னிலையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த ஒப்பந்தங்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மோடி பேச்சு
இதையடுத்து பிரதமர் மோடி தனது பேச்சில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்து நாங்கள் இதில் பேசினோம். இருநாட்டு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்த சந்திப்பு உதவும். இரண்டு நாடுகளும் பல வருடங்களாக நட்பு நாடுகளாக இருந்துள்ளது.

விவாதம்
தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டு இருக்கிறோம். இதுகுறித்து நாங்கள் இருவரும் விவாதம் செய்தோம். தீவிரவாத வளர்ச்சி நாடுகளை தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

பாகிஸ்தான்
நமது பிராந்தியத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சவுதி - இந்தியா சேர்ந்து நடவடிக்கை எடுக்கும். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, தாக்குதல், சைபர் பாதுகாப்பு, உளவுத்துறை தகவல்கள் அனைத்திலும் இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட உறுதி கொண்டு இருக்கிறோம். பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சல்மான் பதில்
இதையடுத்து பேசிய சல்மான், தீவிரவாதமும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையில் அனைத்து உதவிகளையும் சவுதி இந்தியாவிற்கு செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இந்தியாவிற்கு மட்டுமில்ல அனைத்து அண்டை நாட்டிற்கும் சவுதி இப்படி உதவும். இதில் இந்தியாவின் செயல்பாட்டை பாராட்டுகிறோம், என்று சல்மான் கூறியுள்ளார்.
-
Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications