அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு
டெல்லி: இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் வாழும் சட்டவிரோத குடியேறிகளையும், ஊடுருவல்காரர்களையும் அரசு அடையாளம் கண்டு நாடுகடத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இறுதிப் பட்டியலை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு அவசரமாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அணுகிய மத்திய அரசும், அசாம் அரசும், எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டவர் ஊடுருவல் அதிக அளவில் இருப்பதால் டிராப்ட் சரிபார்ப்பு பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவை என கோரின.
இந்த நிலையில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "சரியான குடிமக்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். எனவே ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் கேட்டுள்ளோம். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் ஊடுருவியவர்கள் அனைவரையும் நாங்கள் அடையாளம் கண்டு சர்வதேச சட்டத்தின்படி நாடு கடத்துவோம், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இதை குறிப்பிட்டிருந்தோம்" என்றார்.
உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் கூறுகையில் "சட்ட விரோத குடியேறிகள் என்று சில பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சில பெயர்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, எங்களுக்கு 25 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இறுதி என்.ஆர்.சி பட்டியலில் எந்த பிழையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்" என்றார்.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications