வணக்கம் நல்லா இருக்கீங்களா?.. தூத்துக்குடி பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி
டெல்லி: மனதின் குரல் என அழைக்கப்படும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார் அப்போது அவர் பேசும் போது, தமிழகத்தைச் சேர்ந்த பொன் மாரியப்பனின் செயலை பெருமிதத்துடன் கூறி நினைவு கூர்ந்தார்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வாரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அதன்படி இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, "தசரா என்பது நெருக்கடியின் போது பொறுமையை கடைபிடித்து பெற்ற வெற்றியின் பண்டிகை. எனவே நாம் பண்டிகையை அமைதியாக கொண்டாட வேண்டும். அப்படி நாம் செயல்பட்டால் கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி நிச்சயம்.

யாருக்கு முக்கியத்துவம்
இந்த பண்டிகையின் போது பொருள் வாங்க நம்முடைய உள்ளூர் கடைக்காரர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுங்கள். முன்பெல்லாம், துர்கா பூஜை, தசரா பண்டிகையில் ஏராளமான மக்கள் கூடிவந்தனர் . ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை. இன்னும் பல திருவிழாக்கள் வரப்போகிறது.

தூய்மை பணியாளர்கள்
இந்த கொரோனா நெருக்கடியின் போது நாம் நிதானத்துடன் செயல்பட வேண்டும்:. பண்டிகைகளின் போது, கொரோனா போரில் நமக்காக பணியாற்றுபவர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கும். கடினமான காலங்களில் அவர்கள் நம்முடன் இருந்திருக்கிறார்கள் எனவே துப்புரவு பணியார்கள், போலீசார், சுகாதார பணியார்களை பண்டிகையின் போது அழைத்துச் செல்ல வேண்டும்.

மோடி பெருமிதம்
இப்போதெல்லாம், நம்முடைய பாரம்பரிய விளையாட்டு மல்லகாம்ப் பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. அமெரிக்காவில், சின்மே & பிரக்யா படங்கர் வீட்டில் மல்லகாம்பை கற்பிக்கத் தொடங்கியபோது, அது இவ்வளவு வெற்றியைப் பெறும் என்று அவர்களுக்குத் தெரியாது. இன்று, அமெரிக்காவில் பல மல்லகாம்ப் பயிற்சி மையங்கள் உள்ளன இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்காப்புக் கலைகள் இந்தியாவின் பாரம்பரியம். நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படும்போது, உலகம் அதைக் கவனத்தில் கொள்கிறது

மோடி தமிழில் பேச்சு
தமிழகத்தின் பொன் மாரியப்பன் குறித்து இப்போது நாம் அறிந்து கொள்வோம். தமிழகத்தைச் சேர்ந்த பொன் மாரியப்பன் சலூன் கடையில் சிறப்பான வேலை செய்துள்ளார் அவர் சலூன் கடையின் ஒரு பகுதியை நூலகம் ஆக்கி உள்ளார்" என்றார். தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பனிடமும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வணக்கம் நல்லா இருக்கீங்களா என்று கேட்டார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications