அயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்.. சன்னி வக்ஃப் வாரியம் முடிவு
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர்.
அதில் பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் உள்ள கட்டடங்கள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது இல்லை. சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை முஸ்லீம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

மத்திய அரசு
எனவே நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய இஸ்லாமிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும். வக்ஃபு வாரியம் ஏற்கும் இடத்தில் வழங்க உத்தரப்பிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறுசீராய்வு
இதுகுறித்து சன்னி வக்ஃப் வாரியம் காலையில், 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறியது. ஆனால் சன்னி வக்ஃப் வாரியம் தனது முடிவை இப்போது மாற்றியுள்ளது. அதன்படி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு சரி
இது தொடர்பாக அயோத்யா ஜம்மா மஸ்ஜித் ஷாஹி இமாம் அளித்த பேட்டியில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இஸ்லாமிய மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எதிர்த்து மறுசீராய்வு செய்ய கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியாக இருப்பதாகவே கருதுகிறோம்.

மறுசீராய்வு மனு இல்லை
இதை நாம் எல்லோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய பின்பே இப்படி தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் நாம் மீண்டும் அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய கூடாது என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications