"ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துரதிர்ஷ்டவசமானது!" ராஜீவ் கொலை வழக்கு! 6 பேரை விடுவிக்க காங். எதிர்ப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த ஆறு பேரை விடுவித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரசாரத்திற்காகத் தமிழகம் வந்த போது, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்
பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் என ஏழு பேரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
இதனிடையே ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஆளுநர் முடிவெடுக்கத் தாமதித்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்தது. இதேபோல தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர்.

உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேரறிவாளனை விடுவிக்கும் காரணமே இவர்களும் பொருந்தும் என்று கூறி நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஆறு பேர் விடுவிக்கப்பட்டதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்று வருகின்றன. அதேநேரம் காங்கிரஸ் கட்சி இதை ஏற்க முடியாது என்றும் ஏமாற்றம் தருகிறது என்றும் கூறி வருகிறது.

காங்கிரஸ்
இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பியும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.. மேலும், முற்றிலும் தவறானது. இந்த தீர்ப்பை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்து உள்ளார்.

விமர்சனம்
முன்னதாக இது குறித்து கருத்து கூறியிருந்த காங்கிரஸின் தமிழக எம்பி திருநாவுக்கரசு, "6 பேரின் விடுதலையால் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொல்ல முடியாது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சரியான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது"என்று கூறி இருந்தார். இப்போது காங்கிரஸின் ஜெய்ராம் ராமேஷும் கிட்டதட்ட அதே கருத்தைக் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், 2000ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியின் மனைவியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி தலையிட்ட பின்னர் நளினிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2008இல் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறையில் இருந்த நளினியை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் கடந்த 2014இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இப்போது இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கிறிஸ்தவராக மாறினால் பட்டியல் ஜாதி அந்தஸ்து + உரிமை கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications