Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ், இபிஎஸ் என்ன அர்த்தம்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்வி.. வாதத்தில் முந்துவது யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வழக்கறிஞர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்று குறிப்பிட்ட நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயர்களுக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, இரு வழக்கறிஞர்கள், தங்களது ஊர் பெயரை பெயருக்கு முன் வைத்துள்ளதாக விளக்கமளித்தனர்.

சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீா்ப்பில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கு

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ், இபிஎஸ் என்ன அர்த்தம்?

ஓபிஎஸ், இபிஎஸ் என்ன அர்த்தம்?

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துபவையா?, வழக்கு தொடர்ந்தவர்கள் யார்? யார்?, என்னென்ன பொறுப்பு வகிக்கிறார்கள்?, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேட்டனர்.

எடப்பாடி வாதம்

எடப்பாடி வாதம்

இதற்கு, இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியவற்றுக்கு விளக்கம் கொடுத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழுவுக்கு எதிராக மனுத்தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின் கீழ் வரும். விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்ட முடியும். அதன்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் தான் பொதுக்குழு நடத்தப்பட்டது என்று வாதிடப்பட்டது.

இபிஎஸ் தரப்பு பதில்

இபிஎஸ் தரப்பு பதில்

இதன்பின்னர் இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடிக்கப்பட்டாரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

என் அனுமதியில்லை

என் அனுமதியில்லை

தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் புதிய அவைத் தலைவரை அறிவித்தார்கள். அதுமட்டுமல்லாமல் எனது அனுமதியின்றி கடைசியாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டினார்கள், உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் தொடர்பான ஆவணங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஆவணம் சமர்ப்பித்தோம் என்று வாதிடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+