Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மக்களையே சந்திக்காத ஒருவர்.." திடீரென ஆவேசமான அமைச்சர் பிடிஆர்! உச்சமடையும் ஆளுநருடனான மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், ஆளுநர் அரசியல் பேசுவதாகவும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து உள்ளனர். இதனால் ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் திமுகவினர் குடியரசுத் தலைவரிடமும் மனு அளித்துள்ளனர்.

 அதிகரிக்கும் மோதல்

அதிகரிக்கும் மோதல்

இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பிடிஆர் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் இப்படி நடந்து கொள்வதில் நியாயம் இல்லை என்றும் விமர்சித்தார்.

 அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மத்திய அரசின் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானங்கள் குறித்த தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்க இடமில்லை. நமது நாட்டை அல்லது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இப்படி எந்தவொரு விஷயத்தை உருவாக்கவில்லை. ஆளுநர் பணி என்பது உயர்ந்த கண்ணியம் கொண்டதாக இருக்க வேண்டும்

 பொருத்தமற்றது

பொருத்தமற்றது

மேலும் ஆளுநர் பதவியில் உள்ளவர்கள் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட கருத்துகளையும் சமூகம் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட தங்களின் சொந்தக் கருத்துகளையும் முன்வைப்பது மிகவும் பொருத்தமற்றது. இதெல்லாம் தெரு முனைகளில் அரசியல் செய்பவர்களின் பேச்சுகள். நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மிகப்பெரிய மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ஒருவர் செய்யும் செயல் இது இல்லை. ஆளுநர் பதவிக்கு இது முற்றிலும் பொருத்தமற்றது" என்றார்.

 மோதல்கள்

மோதல்கள்

அமைச்சர் பிடிஆரின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சமீபத்தில் தான் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரைத் திரும்பப் பெறக் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்திருந்தது. கேரளாவில் மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல தெலங்கானா அரசால் தனது ஃபோன் ஒட்டுக்கேட்பாவதாகச் சந்தேகம் உள்ளதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.

 பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்

அமைச்சர் பிடிஆர் மேலும் கூறுகையில், "இவை அனைத்தும் பாஜகவின் ஆட்சி இல்லாத மாநிலங்கள் என்பதையும், இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு பெரியளவில் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார். இதுவே முக்கிய பிரச்சினையாக உள்ளது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் தலையீடும் தடைகளும் அதிகமாக உள்ளது" என்றார்.

 மக்களைச் சந்திக்காத ஒருவர்

மக்களைச் சந்திக்காத ஒருவர்

தென்மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் பிடிஆர் ஆளுநர்கள் பாஜக அல்லாத மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடுவதாகக் கூறியுள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+