பாகிஸ்தானில் அலறவிடும் இந்தியாவின் "ரா" அமைப்பு? உள்ளே வரும் அமெரிக்கா- பரபர கருத்து! என்ன நடக்கிறது
டெல்லி: பாகிஸ்தான் நாட்டில் குறிவைத்து இந்தியா மிஷன்களை நடத்துவதாகவும் இதன் மூலம் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ரிப்போர்ட் வெளியான நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாகவே நல்லுறவு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் அத்துமீறி வந்து பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பான ரா சில மிஷன்களை மேற்கொள்வதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்கா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது
அமெரிக்கா: அதாவது பாகிஸ்தானில் சில கொலை சம்பவங்களை இந்தியா திட்டமிட்டு நடத்துவதாகத் தகவல் வெளியாவதாகவும் இந்த விவகாரத்தை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக பிரிட்டனை சேர்ந்த ஊடகமான தி கார்டியன் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்தியா தங்கள் நாட்டில் அத்துமீறி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் எனக் கூறி சில விஷயங்களையும் தி கார்டியன் இதழுக்குப் பாகிஸ்தான் வழங்கி இருந்தது.
இந்தியா மறுப்பு: இருப்பினும், இந்த ரிப்போர்ட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தவறான ஒரு ரிப்போர்ட் என்றும் இந்தியா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியா விளக்கமளித்துள்ளது.
அமெரிக்கா கருத்து: இந்தச் சூழலில் தான் அமெரிக்காவும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இருப்பினும் இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.. இந்த விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. நிச்சயமாக, இந்த மேட்டரில் இரு நாடுகளுக்கு நடுவே நாங்கள் வரப் போவதில்லை. இருப்பினும், இரு தரப்பினருக்கு இடையே மோதலை தவிர்க்கப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
என்ன மேட்டர்: 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய உளவு அமைப்பான ரா பாகிஸ்தான் நாட்டில் புகுந்து இதுபோல சுமார் 20 மிஷன்களை நடத்தியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் வழங்கிய ஆதாரங்களையும், இரு தரப்பு உளவு அதிகாரிகளின் நேர்காணல்களையும் கார்டியன் வெளியிட்டு இருந்தது. குறிப்பாக இந்தியா தனது தேச பாதுகாப்பிற்கு எதிராக இருப்பவர்கள் எனக் கருதுபவர்களைக் குறிவைத்து மிஷன்களை நடத்தும் பாலிசியை பின்பற்றி வருவதாகத் தெரிவித்து இருந்தது.
இதில் பேசிய பாகிஸ்தான் உளவு அதிகாரி ஒருவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்திய உளவுத்துறையின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் இந்த கொலை சம்பவங்கள் அரங்கேறுவதாகக் கூறியுள்ளார். மற்றொரு பெயர் வெளியிடப்படாத இந்திய அதிகாரி ஒருவர் தேசத்திற்கு எதிரானவர்களை காலி செய்ய இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபி பாணியில் இந்தியா செயல்படும் என்று கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மற்ற நாடுகளில் நடத்தப்படும் கொலைகள் இந்திய அரசின் கொள்கை இல்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications