இதுபோதுமே.. பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க புதிய வசதி.. தேர்தல் நேரத்தில் கலக்கும் வாட்ஸ் ஆப்!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் ''செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline)'' என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் ''செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline)'' என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த வருடம் முழுக்க வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திகள் நிறைய பரவி பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. அதில் முக்கியமானது என்றால் குழந்தை கடத்தல் வதந்தி. இதை தடுப்பதற்காக வாட்ஸ் ஆப் மெசேஜ்களை பார்வேட் செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி ஒரு நபர் ஒரு மெசேஜை ஐந்து முறை மட்டுமே பார்வேட் செய்ய முடியும் என்று கட்டுப்பாடு விதித்தது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எப்படி
வாட்ஸ் ஆப்பில் நாம் பேசுவது end-to-end encryption செய்யப்பட்ட செய்திகள் ஆகும். இதனால் ஒருவர் அனுப்பும் மெசேஜை அனுப்பியவரும், பெறுபவரும் மட்டுமே படிக்க முடியும். வேறு யாரும் படிக்க முடியாது. இதனால் ஒருவர் இன்னோர் நபருக்கு அனுப்பும் செய்தியை பொய்யான செய்தியா என்று வாட்ஸ் ஆப்பால் கூட கண்டுபிடிக்க முடியாது. இதற்குத்தான் தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

தீர்வு என்ன
புரோட்டோ (PROTO) என்ற நிறுவனம் இதற்காக ''செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline)'' என்ற வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. +91-9643-000-888 என்ற எண்தான் இந்த செக்பாயிண்ட் டிப்லைன் வசதியின் வாட்ஸ் ஆப் எண் ஆகும். இதன் மூலம்தான் தற்போது பொய்யான தகவல்களை கண்டுபிடிக்க போகிறார்கள்.

நல்ல யோசனை
முதலில் செக்பாயிண்ட் டிப்லைன் வசதியில் நிறைய பொய்யான செய்திகள், தகவல்கள் சேகரிக்கப்படும். அதன்பின் புதிது, புதிதாக வரும் பொய்யான தகவல்களை நாமும் அவர்களிடம் கொடுக்கலாம். செக்பாயிண்ட் டிப்லைன் பின்னில் இயங்கும் பலர் பல்வேறு துறைகளில் செய்திகளை ஆராய்ந்து வருவார்கள். இதனால் இந்த டேட்டா பேஸ் மூலம் புதிதாக எந்த பொய்யான செய்தி வந்தாலும் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

எப்படி செய்ய வேண்டும்
இதில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம்தான். நமக்கு ஒரு வாட்ஸ் ஆப் செய்தி மீது நம்பிக்கை இல்லையென்றால் போதும், அதை இந்த வாட்ஸ் ஆப் பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அதை தங்களிடம் இருக்கும் டேட்டா பேஸ், அறிவுஜீவிகளின் உதவியுடன் பொய்யா, உண்மையா என்று கண்டுபிடித்து பதில் அனுப்புவார்கள்.

எளிதாக முடியும்
இதை வாட்ஸ் ஆப் நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இதன் மூலம் எளிதாக ஒரு செய்தி பொய்யா உண்மையா என்று கண்டுபிடிக்க முடியும். முக்கியமாக தேர்தல் தொடர்பான செய்திகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications