அடுத்த பயங்கரம்.. பரவி வரும் உயிர்க்கொல்லி Mpox குரங்கு அம்மை.. சுகாதார அவசரநிலையாக அறிவித்தது WHO!
டெல்லி: குரங்கு அம்மை வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதையொட்டி, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதுவரை Mpox குரங்கு அம்மை வைரஸ் 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம், சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை குரங்கு அம்மை வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிளேடு 1 வகை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அதில் 537 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 116 நாடுகளில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று குறித்த சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிறப்பித்துள்ளது. குரங்கு அம்மை தொற்றை கட்டுப்படுத்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் அவசர நிலை பிறக்கப்பட்டு, 2023 மே மாதம் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது குரங்கு அம்மை வைரஸ் காரணமாக 2வது முறையாக அவசர நிலை பிறக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய். 1958இல் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. 1970 வாக்கில் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவியது கண்டறியப்பட்டது.
எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாலியல் தொடர்பு காரணமாக ஆண்களிடம் இருந்தே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே முன்பு இருந்த நிலையில், தற்போது இந்தப் பரவல் ஆப்பிரிக்கக் கண்டத்தை தாண்டி உலகெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.
தற்போது பரவி வரும் குரங்கு அம்மையின் புதிய வகைக்கு clade 1b mpox என பெயரிடப்பட்டுள்ளது. இது முந்தைய வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் குழந்தைகளிடையே இறப்பு சதவீதம் 10% வரை அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளேட் 2 வை விட கிளேட் 1 அதிக பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகளை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிபுணர்கள், குரங்கம்மையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான தரவுகளை வழங்கினர். இந்த தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்காக, சர்வதேச சுகாதார விதிமுறைகள் தொடர்பான குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையின் முடிவிலேயே உலக சுகாதார அமைப்பின் தலைவர் இதை பொது சுகாதார அவசரநிலை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "இந்த பரவல் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக கருதப்படுகிறது. இந்த பரவல் மிகவும் கவலைக்குரியது. பரவலைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் ஒருங்கிணைந்த சர்வதேச செயல்பாடுகள் அவசியம்" எனக் கூறியுள்ளார்.
Mpox வைரஸ், காய்ச்சல், குளிர் காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. உடலில் அம்மை போன்ற வீக்கங்கள் ஏற்படும். மிகவும் தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications