சிக்கிம் இன்னொரு தமிழ்நாடு.. பாஜக, காங்கிரஸால் நுழைய முடியாத கோட்டை.. யார் இந்த பிரேம் சிங் தமாங்?
டெல்லி: தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளால் அதிகாரத்துக்கு வரமுடியாத மாநிலமாக திகழும் தமிழ்நாட்டை போன்ற மாநிலம் சிக்கிம். அங்கு தற்போது முதல்வராக இருக்கும் பிரேம் சிங் தமாங் (பிஎஸ் கோலே), சிக்கிம் மாநிலத்தின் 25 வருட வரலாற்றை மாற்றிக்காட்டியவர். 2019ல் ஆட்சியை கைப்பற்றிய இவரது எஸ்கேஎம் கட்சி, தற்போது 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பிற மாநில காட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எப்படியோ அதுபோல் தான் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், சிக்கிம் ஜனநாயக முன்னணியும் அங்கு உள்ளன.

சிக்கிமில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்.
சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 29 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் தான் முன்னிலையில் இருக்கிறது.
சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் உள்ள சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியை பற்றி பார்ப்போம். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்பதன் அர்த்தம் சிக்கிம் புரட்சிகர முன்னணி என்பதாகும். பெயருக்கு தகுந்தாற் போல் சிக்கில் இந்த கட்சி மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் 1994 முதல் 2019 வரைர 25 வருடங்களாக சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங்கை ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது. இதற்கு காரணம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் தான்.
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் முன்னதாக சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இவர் சிக்கிமில் பவன் குமார் சாம்லிங்கின் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பிரேம் சிங் தமாங் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியை தொடங்கினார். இவர் கட்சியை தொடங்கிய உடன் பாரதி சர்மா என்பவரை செயல் தலைவராக அறிவித்து கட்சியை நடத்தி வந்தார்.
அதன்பின்னர், முறைப்படி சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகி, 2013 செப்டம்பரில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் இணைந்தார்.. 2014ல் முதல் முறையாக பிரேம் சிங் தமாங் சந்தித்த தேர்தலில் அவரது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32ல் 10 இடங்களில் வென்றது. 40.8% வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அடுத்த ஐந்து வருடங்களில் அப்படியே வேறலெவலில் மாறியது.
2019ல் பிரேம் சிங் தமாங்கின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது.பிரேம் சிங் தமாங் ( தற்போது பிஎஸ் கோலே என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார்) சிக்கிம் மாநிலத்தின் முதல்வரானார். 2019ல் தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தவர், 2024ல் தற்போது தனித்து போட்டியிட்டார்.. இதில் முதல்வர் பிஎஸ் கோலேவின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32ல் 29 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதில் மாறுபாடு இருந்தாலும் மீண்டும் பிரேம் சிங் தமாங்கின் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. சிக்கிம் மாநிலத்தை பொறுத்தவரை தமிழ்நாடு போன்று தேசிய கட்சிகளை அனுமதிக்காத மாநிலம் ஆகும். அங்கு மாநில கட்சிகளே வெற்றி பெறுகின்றன. தேசிய கட்சிகள் இங்கு வெற்றி பெற பல ஆண்டுகளாக தவம் இருக்கின்றன. ஆனால் வெற்றி பெற முடியவில்லை..
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications