உலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை
டெல்லி: கடந்த வாரம் ஒட்டுமொத்தமாக உலகில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பில் 50% இந்தியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 14ஆவது நாளாக மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் உலகில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டதட்ட பாதி, இந்தியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சுமார் 46% இந்தியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் 3,780 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் இது ஒட்டுமொத்தமாக உலகில் பதவி செய்யப்பட்ட உயிரிழப்புகளில் 25% என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..
மேலும், நாட்டில் பல்வேறு இடங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதையடுத்து மோடி அரசு கொரோனா 2ஆம் அலையைக் கையாள்வதில் தோல்வியடைந்து விட்டதாகப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனப் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் விமர்சித்துள்ளார்.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications