Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

க்யூ.ஆர் கோட் உடன் வரும் "பான் 2.0.." யாரெல்லாம் அப்ளை செய்ய வேண்டும்! இதற்கான கட்டணம் எவ்வளவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இப்போது பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் குறித்த 8 முக்கிய கேள்விகளையும் அதற்கான பதிலையும் நாம் பார்க்கலாம். குறிப்பாக இந்த புதிய பான் 2.0க்கு நாம் விண்ணப்பிக்க வேண்டுமா.. இதற்கு என்ன கட்டணம் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.

நாடு முழுக்க காகிதமற்ற மற்றும் ஆன்லைன் முறையிலான பான் அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்றைய தினம் பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

pan card pan 2 0 2 0

பான் 2.0: இந்தத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது. பிஸ்னஸ்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, தற்போதுள்ள சிக்கல்களை எளிதாகத் தீர்ப்பது, சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உருவாக்கப்படும்.

மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது: இந்த பான் 2.0 திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்த மத்திய அரசு இதற்கு ரூ.1,435 கோடி ஒதுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.

இதன் நோக்கம் என்ன? டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி மக்கள் தங்களை வரி செலுத்துவோராகப் பதிவு செய்வதை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.. இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் நிலையில், அரசின் செயல்திறனும் அதிகரிக்கிறது.

நன்மைகள் என்ன? இதன் மூலம் பான் சார்ந்த சேவைகளை நம்மால் எளிதாக அணுக முடியும். இதன் மூலம் பான் சேவைகளின் தரம் மற்றும் வேகத்தை அதிகரிக்க முடியும். இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் இருக்கும் என்பதால் இதற்கான செலவுகள் குறையும். சுற்றுச்சூழலையும் பெரியளவில் பாதிக்காத ஒன்றாக இருக்கும்.

அப்டேட் என்ன? தற்போதுள்ள பான் மற்றும் டான் 1.0 கட்டமைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் கோர் மற்றும் நான் கோர் பான்/ டான் தேவைகளை ஒரே இடத்தில் செய்ய முடியும். மேலும், பான் வெலிடெஷன் சர்வீஸையும் இது எளிதாக்க உதவுகிறது.

என்ன மாற்றம்? டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த பான் 2.0 திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் சேவைகளுக்கும் பொதுவான அடையாளமாக பான் மாறும். மேலும், பான் கார்ட் வைத்திருப்போரின் அனைத்து தகவல்களையும் எளிதாக அணுகும் வகையில் க்யூ.ஆர் கோட் வசதியும் இதில் இருக்கும்

ஏன் முக்கியம்: பான் சார்ந்த ஏழும் பிரச்சினைகளை மிக வேகமாக குறை தீர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகிறார். இது பொதுமக்களின் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யும்.

தற்போதைய நிலை என்ன? இப்போது நாடு முழுக்க ​​மொத்தம் 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 98 சதவீதம் பான் கார்டுகள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

யார் விண்ணப்பிக்க வேண்டும்? தற்போதுள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் எதையும் மாற்றவோ அல்லது புதிய கார்டுகளுக்கு விண்ணப்பிக்கவோ தேவையில்லை. பேக் கிரவுண்டிலேயே அனைத்தும் நடக்கும். அதேநேரம் க்யூஆர் கோட் உடன் கூடிய பான் கார்ட் தேவை என்றால் மட்டும் அப்ளை செய்து கொள்ளலாம். அது இலவசமாகவே வழங்கப்படும்.
PAN 2.0 is now approved by govt who to apply (பான் கார்டு 2.0ஐ திட்டத்திற்கு யார் எல்லாம் விண்ணப்பிக்க வேண்டும்): All things to know about PAN 2.0.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+