10% கோட்டா.. இது பெரும் அநீதி.. ஏன் இந்த இடஒதுக்கீடு மக்களுக்கு எதிரானது தெரியுமா?
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Recommended Video

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா நேற்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இது இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதா பல வகையான கேள்விகளை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரைக்கு முழுக்க முழுக்க எதிராக இருக்கும் இந்த மசோதா காரணமாக இந்தியாவின் ''சிஸ்டம்'' மொத்தமாக சீர்குலைய வாய்ப்புள்ளது.

என்ன கட்டுப்பாடு
இந்த இடஒதுக்கீட்டிற்கு சில வரையறைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஒருவருக்கு இருக்க வேண்டும். விவசாய நிலம் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்க வேண்டும். வீடு இருக்கும் நிலம் 1000 சதுர அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நகரத்தில் 109 அடி நிலத்திற்கும் அதிகமான பகுதியில் வீடு இருக்க கூடாது. கிராமத்தில் 209 அடி நிலத்திற்கும் அதிகமான பகுதியில் வீடு இருக்க கூடாது.

இரண்டு ஒன்று கிடையாது
இந்த இடஒதுக்கீடு முறையில் நிறைய தவறுகள் இருக்கிறது. நாம் இதில் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், சாதி ரீதியான இடஒதுக்கீடு, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு ஆகிய இரண்டு இடஒதுக்கீடு முறையும் ஒன்று கிடையாது என்பதுதான். பொருளாதார நிலை எப்போது வேண்டுமானாலும் மாற கூடியது. அதற்கு பொருளாதார திட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் சாதி முறை பல ஆயிரம் வருடமாக இருப்பது. அதை மாற்ற இடஒதுக்கீடு மட்டுமே சரியாக இருக்கும். சாதி ரீதியாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வை, பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ளது ஏற்றத்தாழ்வுடன் ஒப்பிட்டு, இடஒதுக்கீடு அளிப்பது, இந்திய அமைப்பையே சீரழிக்கும்.

யார் ஏழை
அதேபோல் பொருளாதார இடஒதுக்கீடு பெற நிறைய வரையறைகளை அரசு கூறி இருந்தாலும், இவர்களை எல்லாம் அரசு எப்படி இனம் காண போகிறது என்று எந்த விதமான குறிப்பும் இல்லை. ஒரே வீட்டில் அண்ணன் பணக்காரராகவும், தம்பி ஏழையாகவும் இருந்தால் என்ன செய்வார்கள், கணக்கில் காட்டாத பல கோடி சொத்துக்களை வைத்து இருந்தால், பினாமி பெயரில் சொத்து இருந்தால் என்ன செய்வார்கள் என்ற பல கேள்வி எழுந்துள்ளது. இதை எப்படி நடைமுறைபடுத்த போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

திடீரென்று மாறினால்
இதில் எழுந்துள்ள இன்னொரு பெரிய சந்தேகம், திடீரென்று ஒருவர் பணக்காரரானால், திடீரென்று அதிக சம்பள உயர்வு பெற்றால், சினிமாவில் நடித்து பிரபலம் ஆகி கோடிகளில் பணம் பெற்றால், இந்த இடஒதுக்கீடு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதி மொத்தமாக அழிந்தால் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை நிறுத்தலாம். ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் போது பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டிற்கு என்ன வரம்பு இருக்கிறது என்ற பெரிய கேள்வி உருவாகியுள்ளது.

திடீரென்று ஏழையானால்
அதேபோல் பெரும் பணக்காரர் ஒருவர் அனைத்து பணங்களையும் இழந்து ஏழையானால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் என்பது மாதம் 66666 ரூபாய். இவ்வளவு சம்பாதிப்பவர்களும், 5 ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்களும் உண்மையில் ஏழையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரிய அநீதி
இது அனைத்தும் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே வழி வகுக்கும். இது சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதே சரியானது. உதாரணமாக, ஏழையாக இருக்கும், 49 சதவிகித கோட்டா மூலம் இடம் கிடைக்காமல் இருக்கும் ஒரு இடைநிலை சாதி, பட்டியலின சாதியை சேர்ந்த நபர், இந்த கோட்டா மூலம் பெரிதும் பாதிக்கப்படுவர். இது ஏழையான பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அநீதி ஆகும்.

வளர்ந்தவர்கள் மேலும் வளர்வார்கள்
இது ஏழையை மேலும் ஏழைகளாக மாற்றும். ஏற்கனவே பெரிய பதவிகளில் இருக்கும் மக்கள் இன்னும் பெரிய பதவிகளை பெற இது இன்னும் வழிவகுக்கும். முக்கியமாக பெரிய சமுதாய ஏற்றத்தாழ்வுகளை இது இந்தியாவில் கொண்டு வரும். இதனால் ஏழை தாயின் மகன் சக ஏழை தாயின் மகன்களுக்கு ஏன் உதவுவது இல்லை என்ற கேள்வி உருவாகி உள்ளது!












Click it and Unblock the Notifications