அடுத்த 48 மணி நேரம் முக்கியம்.. நாளைய அதிகாலை பொழுது சாதாரணமாக இருக்க போவது இல்லை! ஏன் தெரியுமா?
சென்னை: பாகிஸ்தான் - இந்தியா இடையே அதிகாரபூர்வ போர் தொடங்கிவிட்டது. அதிகாரபூர்வமாக இதை போர் என்று இந்தியா அறிவிக்கவில்லை என்றாலும் கூட.. நிலைமை கைமீறிவிட்டது. இனி அமைதி பேச்சுவார்த்தை, 3ம் நாடு ஒன்றின் தலையீடு இல்லாத வரை மோதல் நிற்காது.. இதன் காரணமாகவே அடுத்த 48 மணி நேரம் முக்கியம்.. ஏன் என்று இங்கே பார்க்கலாம்!
1. ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
2. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
4. பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது.
5. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

6. இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
7. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.
8. அதேபோல் பாகிஸ்தானின் இன்னொரு முக்கிய இடமான சியால்கோட்டில் இந்தியா கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது.
9. லாகூரில் உள்ள ஏவுகணை தடுப்பு சிஸ்டங்கள் ஏற்கனவே நொறுக்கப்பட்டுவிட்டது. அங்கே ஏவுகணை தடுப்பு சிஸ்டங்கள் வேலை செய்யாத நிலையில் இந்தியா அங்கே தாக்கி உள்ளது.
10. இன்னொரு பக்கம் எல்லையில் கடுமையான பீரங்கி தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
11. இன்னொரு பக்கம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அஜித் தோவல் உள்ளிட்டோருடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முப்பை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தான் தாக்குதலையடுத்து மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அடுத்த 48 மணி நேரம்
இந்தியாவின் பதிலடிக்கு அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி தரலாம். இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தரலாம். முக்கியமாக அதிகாலை அடிப்பதே இந்தியாவின் ஸ்டைல். இதனால் நாளை பொழுது விடியும் போது நிலைமை இன்னும் மோசமாகி இருக்கலாம்.
ஏனென்றால் நாம் லாகூரில் கைவைத்துவிட்டோம். இதற்கு பாகிஸ்தான் கண்டிப்பாக பதில் அட்டாக் நடத்தும். அதை இந்தியாவும் உடனே தடுத்து இன்னும் கடுமையாக தாக்கும். லாகூரில் தாக்குவது சாதாரண விஷயம் இல்லை. அது பாகிஸ்தானின் இருதயம்.
அந்த நாட்டின் அரசியல் தலைநகர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை விட.. இங்கே தாக்குவது கடுமையானது. இதனால் நாளைய அதிகாலை பொழுது சாதாரணமாக இருக்க போவது இல்லை.. அடுத்த 48 மணி நேரத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.











Click it and Unblock the Notifications