நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, நரேந்திர மோடியை புகழ்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லை பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம், இந்திய நிலப்பகுதியில் ஒரு இன்ச் கூட சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

அப்படியானால் எதற்காக இந்த மோதல் நடைபெற்றது, எந்த இடத்தில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
நேற்று ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் நரேந்திர மோடி சரணடைந்து விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
China killed our soldiers.
— Rahul Gandhi (@RahulGandhi) June 22, 2020
China took our land.
Then, why is China praising Mr Modi during this conflict? pic.twitter.com/iNV8c1cmal
இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி மேலும் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், சீன மீடியாக்கள் நரேந்திர மோடியின் பேச்சை புகழ்கின்றன. இதுதொடர்பாக ஒரு நாளிதழின் செய்தியை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, சீனா நமது ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளது, நமது நிலப்பகுதியை சீனா எடுத்துக்கொண்டது, அப்படியிருக்கும்போது, இப்படியான ஒரு மோதல் நிலையில், நரேந்திரமோடியை சீனா எதற்காக பாராட்ட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications