காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் இருப்பு! எதிர்காலமே மாறும்.. ஏன் அவ்வளவு முக்கியம் தெரியுமா
நாட்டிலேயே முதல்முறையாக லித்தியம் இருப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கார்பன் உமிழ்வைக் குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி தயாரிக்கத் தேவையான முக்கிய தாதுவான லித்தியம் நாட்டிலேயே முதல்முறையாகக் காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பூமி இப்போது பருவநிலை மாற்றம் தொடங்கி நாம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. புவி வெப்ப மயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதனால் பெட்ரோல் வாகன பயன்பாட்டைக் குறைத்து... மின்சார வாகனங்களை நோக்கிச் செல்ல அனைத்து நாடுகளும் ஊக்குவித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு மிக மிக முக்கியமானது என்றால் அது பேட்டரிக்கள் தான்.

லித்தியம் இருப்பு
இப்போது உருவாக்கப்படும் பேட்டரிக்கள் பெரும்பாலும் லித்தியன் ஐயான் பேட்டரிக்களாகவே உள்ளன. இதற்கிடையே நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த லித்தியம் தான் மின்சார வாகனங்களுக்குத் தேவைப்படும் பேட்டரிக்களுக்கு முக்கிய தேவையாகும். காற்று மாசை குறைக்க மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இப்போது பேட்டரிக்களுக்கு தேவையான முக்கிய தாது உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எங்கே
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் வளங்களை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகச் சுரங்க துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க பல மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. நாட்டில் மொத்தம் 51 கனிம தொகுதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இவை அனைத்தும் இப்போது சம்மந்தப்பட்ட மாநில அரசிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 51 தொகுப்புகள்
இந்த 51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் தங்கமும் மற்ற தொகுதிகளில் பொட்டாஷ், மாலிப்டினம் உள்ளிட்ட தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர, 7897 மில்லியன் டன் நிலக்கரி மற்றும் லிக்னைட் பற்றிய 17 அறிக்கைகளும் நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஏன் முக்கியம்
இப்படிப் பல கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இதில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லித்தியம் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். வரும் காலங்களில் லித்தியம் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த பேட்டரிக்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். இதனால் பேட்டரி வாகனங்களில் விலையும் கூட கணிசமாகக் குறையும்.

செய்ய வேண்டிய திட்டங்கள்
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-24இல் செய்ய வேண்டிய களப் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. 2023-24இல் 12 கடல் கனிம ஆய்வுத் திட்டங்கள் உட்பட 318 கனிம ஆய்வுத் திட்டங்கள் என மொத்தம் 966 திட்டங்களைச் செய்து வருகிறோம். முக்கியமான கனிமங்கள் குறித்து மீது 115 திட்டங்களையும், உர கனிமங்கள் மீது 16 திட்டங்களையும் வைத்துள்ளோம். இப்படித் துறை ரீதியாகப் பல ஆய்வுகளைச் செய்து வருகிறோம். இது தவிரப் பல இடங்களில் பயிற்சி மையங்களையும் அமைக்கிறோம்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மையம்
ரயில்வே-க்கு தேவையான நிலக்கரி டெபாசிட்களை கண்டுபிடிக்க 1851இல் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) அமைக்கப்பட்டது. அதன் பிறகு நிலக்கரி தவிரப் பல முக்கிய தாதுகளையும் இது கண்டறியத் தொடங்கியது. சர்வதேச அளவிலும் புவி-அறிவியல் துறையில் இது முக்கியமான ஒரு இடத்தை பெற்றுள்ளது. இதன் முக்கிய பணி தேசிய புவி அறிவியல் தகவல் மற்றும் கனிம வள மதிப்பீட்டை உருவாக்குவதே ஆகும்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications