Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டிசம்பர்" சர்ச்சை.. கொரோனா தோற்றம் முதல் உருமாற்றம் வரை! எல்லாமே இந்த மாதத்தில் மட்டும் நடப்பது ஏன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இப்போது புதிதாக ஜேஎன் 1 கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில், ஏன் டிசம்பர் மாதங்களில் புதிய வேரியண்ட் பரவுகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

கடந்த 2019ஆம் ஆண்டில் இதேபோன்ற குளிர் காலத்தில் தான் கொரோனா முதலில் பரவ தொடங்கியது. அப்போது புத்தாண்டு சமயத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் குறித்த தகவல் கிடைத்தது.

 Why new Corona variant always forming on December what is the real reason

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொடர்ச்சியாகப் புதிது புதிதாக உருமாறிக் கொண்டே இருக்கிறது.

ஜே என் 1 கொரோனா: இந்தாண்டு டிசம்பர் மாதம் புதிதாக ஜே என் 1 என்ற வகை கொரோனா கண்டறியப்பட்டது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும், இதனால் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்த புது ஜேஎன் 1 கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கண்காணிக்க வேண்டிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது.

இந்தாண்டு என்று இல்லை கடந்த காலங்களில் டிசம்பர் மாதங்களில் தான் புது வகை கொரோனா தோன்றி இருக்கிறது. 2020 டிசம்பர் மாதம் மூன்று பெரிய திரிபுகள் ஏற்பட்டது. ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351) மற்றும் காமா (பி.1) ஆகிய வேரியண்ட்கள் பரவின. ஓராண்டுக்குப் பிறகு டிசம்பர் 2021இல் புதிதாகப் பரவிய ஓமிக்ரான் கொரோனா மீண்டும் பல நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் திடீரென எகிறும் கொரோனா.. 4000ஐ தொட்ட ஆக்டிவ் கேஸ்கள்.. தென் மாநிலங்களில் தான் நிலைமை மோசம்

வேரியண்ட்கள்: அதற்கு அடுத்த ஆண்டு, 2022 டிசம்பரில் புதிய வேரியண்ட் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பிஏ 2, பிஏ 5 என்ற துணை வேரியண்ட்கள் ஏற்பட்டது. இவை புது கொரோனா வேரியண்ட்கள் ஆகும். கொரோனா வைரஸ் தோன்றியது முதல் அதன் பெரும்பாலான திரிபுகள் டிசம்பர் மாதம் தான் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.

இதற்கு முக்கிய காரணமே டிசம்பரில் இருக்கும் குளிர் காலம் தான். டிசம்பர் மாதம் இருக்கும் குளிரான வானிலை கொரோனா கேஸ்கள் அதிகரிக்கக் காரணமாக இருப்பதைப் பல ஆய்வுகள் சுட்டுக் காட்டுகின்றன. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், டெல்டா கொரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்தினர். அதில் கொரோனா பரவ வானிலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

என்ன காரணம்: கோடைக் காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு வரும் போது, ​​வெப்பநிலை குறைகிறது. மேலும், வறண்ட காற்று, குளிரான வெப்பம் இணைந்து கொரோனா வேகமாகப் பரவும் சூழலை ஏற்படுத்துகிறது. சீன ஆய்வாளர்களும் இதை உறுதி செய்துள்ளனர்.. வெயில் காலத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதாகத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மருத்துவர் திபு கூறுகையில், "மற்ற சுவாச வைரஸ்களைப் போலவே கொரோனாவும் பருவத்தின் அடிப்படையில் பரவும்.. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று கொரோனா.. மற்றொன்று நமது உடல்கள். வைரஸ்கள் பரவும் போது அது புதிதாக மாறுகிறது. இப்படி வைரஸ் மாறிக் கொண்டே இருப்பதால் நமது உடல் அதைச் சமாளிக்கக் கூடுதலாக வேலை செய்யும். இது நமது உடலைப் பலவீனப்படுத்துகிறது" என்றார்.

காரணங்கள்:
மேலும், டிசம்பர் மாதம் தான் பொதுவாகப் பயணங்கள் அதிகமாக இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விடுமுறை நாட்களில் அதிகப்படியான மக்கள் பயணம் செய்வார்கள். இதுவும் கொரோனா பரவ காரணமாக இருக்கிறது. கொரோனா பரவ பரவ அது புதிதாக உருமாற்றம் அடையவும் வாய்ப்புள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+