Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இருந்தாலும்.. சண்டிகர் மேயர் பதவியை ஆம் ஆத்மியால் காப்பாற்ற முடியாது! ஏன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமாக வாக்களித்தாலும் கூட மேயர் பதவியைக் காப்பது கஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் சண்டிகரில் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து வேட்பாளரை நிறுத்தியது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குல்தீப் குமார் களமிறக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பாஜக மனோஜ் போட்டியிட்டார்.

Why Supreme Court order may not help INDIA bloc retain Chandigarh Mayors post

இதில் தேவையான ஆதரவு இருப்பதால் இந்தியா கூட்டணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஷாக் தருவதாக இருந்தது. ஏனென்றால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

சண்டிகர் தேர்தல்: ஏனென்றால் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் 8 பேரின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் அறிவித்தார். இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் வாக்குச்சீட்டில் ஏதோ திருத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியது.

இதையடுத்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூறிய நிலையில், இது தொடர்பாக குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் அறிவித்த தேர்தல் முடிவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் வென்றதாக உத்தரவிட்டது.

சிக்கல்: ஆனால் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள போதிலும், அங்கே இந்தியா கூட்டணிக்கான சிக்கல் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. அடுத்தகட்டமாகப் பெரும்பான்மையை நிரூபிப்பதில் இந்தியக் கூட்டணிக்குச் சிக்கல் இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னதாக தான் சண்டிகரில் உள்ள 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் ஐக்கியமானார்கள்.

கடந்த ஜன. 30இல் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்குத் தனித்தே அவர்களின் 14 கவுன்சிலர்கள் வாக்குகள் கிடைத்தன. இது தவிர ஷிரோமணி அகாலி தளத்தின் இரண்டு கனவுன்சிலர்கள் வாக்கு, ஒரு பாஜக எம்.பி.யான கிரோன் கெர் என்பவரின் வாக்கும் பாஜகவுக்கு விழுந்தது.. இந்தச் சூழலில் பூனம் தேவி, நேஹா முசாவத் மற்றும் குர்சரண் கலா ஆகிய மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம், 36 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் கவுன்சிலில் அவர்களின் ஆதரவு 19ஆக உள்ளது.

நம்பர் கேம்: மறுபுறம் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி 20 வாக்குகள் கிடைத்தன. அதில் தான் 8 வாக்குகள் செல்லாது எனத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இருப்பினும், இப்போது அந்த எட்டு வாக்குகள் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்தியக் கூட்டணியின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. ஏனென்றால் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர்.

தற்போதைய சூழலில் சண்டிகர் கவுன்சிலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் பலம் 17ஆகவும் பாஜகவின் பலம் 19ஆகவும் இருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு இப்போது இரண்டு வாக்குகள் குறைவாக இருப்பதால், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜக கோரலாம். அப்படிச் செய்தால் மேயர் பதவியைக் காப்பாற்றுவது கஷ்டம் என்றே சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+