புதிய AY.4. வைரஸ் எப்படி இருக்கும்? நிபுணர்கள் கருத்து என்ன?
டெல்லி: புதிய AY.4.2 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டாவை விட அதிக பரவும் தன்மை இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலை என வந்துவிட்டது. இந்த இரண்டாவது அலையின் போது இந்தியாவில் டெல்டா வகை வேரியண்ட் எனும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வந்ததால் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.

தற்போது மூன்றாவது அலையானது எப்போது வேண்டுமானாலும் பரவும் அளவுக்கு "தயார் நிலையில்" இருக்கிறது. 2ஆவது அலையின் போது மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல், ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2ஆவது அலையின் போது நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன.
இந்த நிலையில் மூன்றாவது அலை எப்படி இருக்கும் என மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இரண்டாவது அலையின் போது டெல்டா வேரியண்ட் எனும் உருமாறிய வைரஸ் பரவியதால் அது தீவிரமடைந்தது. அது போல் மூன்றாவது அலை தீவிரமடைய மற்றொரு வேரியண்ட் வந்தால் மட்டுமே அது நடக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது புதிய வேரியண்டான AY 4.2 என்பது வேகமாக பரவி வருகிறது. இதை மத்திய அரசும் உறுதிப்படுத்தியது. AY.4.2 எனப்படும் SARS-CoV2 கொரோனா வகையின் சுமார் 17 மாதிரிகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது டெல்டாவின் உருமாறிய வகையாகும். இதுதான் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில் டெல்டா வேரியண்டை விட அதிக அளவில் AY 4.2 பரவும் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் 6 பேருக்கு இதன் பாதிப்பு ஏற்பட்டது. இந்த 6 பேரும் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள். இவர்கள் சிகிச்சைக்கு பிறகு குணமாகினர். A.Y.4.2 புதிய வேரியண்ட் அல்ல. 39,283 சாம்பிள்கள் எடுக்கப்பட்டதில் 4,143 சாம்பிள்களில் AY சீரிஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பரவி வருகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications