லாக்டவுனை மேலும் 1 மாதத்துக்கு நீட்டிக்கலாம்.. ஒடிஷா முதல்வர் யோசனை.. ஆதரித்த முதல்வர்கள்
டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று ஒடிசா, மேகாலயா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 27500க்கும் அதிகமான மக்களுக்கு பரவி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2000 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவும் மிக அதிகமாக உள்ளது.
இதற்கிடையே கடந்த மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் லாக்டவுன் ஏப்ரல் 14ம் தேதி முடிந்தது. இதையடுத்து மீண்டும் லாக்டவுன் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கடைகளுக்கு அனுமதி
ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கிராமப்புறங்களில், கொரோனா இல்லாத பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் ஒட்டுமொத்த பகுதியிலும் போக்குவரத்து முடங்கி உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

பிரதமர் ஆலோசனை
இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும், லாக்டவுனை நீட்டிப்பது குறித்தும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் முறையில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர்.

மேகாலயா முதல்வர்
அவர்களில் நான்கு மாநில முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர். குறிப்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லாக்டவுனை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் லாக்டவுனை இன்னும் கொஞ்சம் நாட்கள் நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர்.

முக்கிய செயல்பாடு
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் லாக்டவுன் காலத்தில் பொதுவான விதிமுறைகள்- கட்டுப்பாடுகளை தேசிய அளவில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவியாக இருக்கும். நிதி ஆயோக் என்பது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும். தேசிய அளவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும் முக்கியமான செயல்பாடுகளை அனுமதிக்க வேண்டும் என்றார்.

லாக்டவுன் நீட்டிப்பா
இதற்கிடையே மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் லாக்டவுனை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் மாநில முதல்வர்களின் பேச்சுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு பின் பதில் அளித்து பிரதமர் மோடி பேசும் போது லாக்டவுனை நீட்டிக்கும் விவகாரத்தில் மே 3ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. எனவே மே 3ம் தேதி தான் லாக்டவுன் நீட்டிப்பா இல்லை என்பது தெரியவரும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications