சசிகாந்த் செந்தில் “மேஜிக்”.. கர்நாடகாபோல் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு “கை” கொடுக்குமா ராஜதந்திரம்?
டெல்லி: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம்அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது.

குறிப்பாக தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக மதுசுதன் மிஸ்திரியை நியமித்தது அந்த கட்சி. அவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை தேர்தல் பார்வையாளராக அறிவித்தது. இவர்தான் கர்நாடக மாநில தேர்தலில் அக்கட்சியின் சமூக வலைதள தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு வியூகங்களை வகுத்து, வதந்திகளை முறியடித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் வகித்த ஐஏஎஸ் பதவியை விட்டே விலகினார் சசிகாந்த் செந்தில். தொடர்ந்து மக்கள் நடத்திய போராட்டங்களில் பங்கெடுத்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். கர்நாடகா தேர்தல் களத்தில்தான் இவரது முழு திறமையை உலகம் கண்டுகொண்டது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார் சசிகாந்த் செந்தில். கர்நாடக தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய #CryPMPayCM, #PayCM போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி பாஜக அரசின் 40 சதவீத கமிஷனை அம்பலப்படுத்தியது இவர் தலைமையிலான அணிதான். இந்த நிலையில், காங்கிரஸின் மூத்த தேர்தல் பொறுப்பாளர் மிஸ்திரிக்கு துணையாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக சசிகாந்த் செந்தில் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டார்.
தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அது குறித்து பதிவிட்ட சசிகாந்த் செந்தில், "பணம், வெறுப்பு பிரச்சாரம் மூலம் வாக்குகளை வாங்க முடியும் என்ற புணைவு ராஜஸ்தானில் தகர்க்கப்பட்டு இருக்கிறது. வரலாறு ராஜஸ்தானில் படைக்கப்படும். இன்ப அதிர்ச்சிக்கு காத்திருங்கள். 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்டத்தில் பாஜக மேம்படுத்திக்கொள்ளட்டும். இந்திய மக்களுக்கே நீங்கள் வலிமையான எதிரியாக எதிராக உள்ளீர்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது தபால் வாக்குகள் முடிவில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் சசிகாந்த் சொன்னதுபோல் நிலைமாறு மாறுமா அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என்று பார்ப்போம்.
-
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications