சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைகிறதா? நாளை வெளியாகுது முக்கிய அறிவிப்பு.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
டெல்லி: சமையல் எரிவாயு விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (டிசம்பர் 1) காலை சிலிண்டர் விலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட உள்ளன. இதனால், சிலிண்டர் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கச்சா எண்ணைய் நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

கடந்த இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வந்தது. அதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை குறைந்து வந்த நிலையில், அதன் பிறகு விலை உயர்ந்தது. அதாவது, கடந்த ஆகஸ்டு மாதம் 7 ரூபாய் 50 காசும், செப்டம்பர் மாதம் ரூ.38, அக்டோபர் மாதம் ரூ.48 , நவம்பர் மாதத்தில் ரூ.60 என தொடச்சியாக விலை உயர்ந்தது.
இதனால், வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைதனர். தற்போதைய நிலவரப்படி, வணிக பயன்பாடு சிலிண்டர் விலை சென்னையில் 1,964 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக எந்த மாற்றமும் இன்றி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, எல்பிஜி (வீட்டு உபயோகத்துக்கான) சிலிண்டர் விலையை பொறுத்தவரை ரூ.818.50 ஆக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ரூ.100 குறைத்து அறிவித்தது. அதன்பிறகு விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையிலும் விலை குறைந்தாலும் அதன் பயனை நுகர்வோர்களுக்கு கடத்தவில்லை. இந்த நிலையில்தான் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாளை (டிசம்பர் 1) காலை அறிவிப்பு வெளியாக உள்ளது. காலை 6 முதல் 7 மணிக்குள் அறிவிப்பு வெளியாகக் கூடும்.












Click it and Unblock the Notifications