மாதவிடாய் காலத்தில் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது? ஸ்மிருதி சொன்ன பலே உதாரணம்
Recommended Video

டெல்லி: அனைவருக்குமே வழிபடுவதற்கான உரிமை உள்ளதே தவிர இழிவுபடுத்துவதற்காக உரிமை கிடையாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இளம் சிந்தனையாளர்கள் மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது இதில் பங்கேற்று ஸ்மிருதி இரானி (42) பேசுகையில் சபரிமலை விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது.
|
இழிவுபடுத்தும் உரிமை இல்லை
ஆனால் வழிபடும் உரிமை உள்ளது என்பதில் எனக்கு எவ்வாறு நம்பிக்கை உள்ளதோ அதே போல இழிவுபடுத்துவதற்காக உரிமை கிடையாது என்பதிலும் நம்பிக்கை உள்ளது. இதற்கு பெரிய சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாமானியமாக நீங்களே யோசியுங்களேன்.

சானிட்டரி நாப்கின்
மாதவிடாய் காரணமாக ரத்தத்தோடு இருக்கக்கூடிய ஒரு சானிட்டரி நாப்கினை உங்களது நண்பர்களின் வீட்டுக்கு தூக்கி கொண்டு செல்வீர்களா? இல்லை தானே! அப்படி இருக்கும்போது கடவுளின் வீட்டுக்கு மட்டும் ஏன் அவ்வாறு சென்றே ஆகவேண்டும்?

நானும் பின்பற்றுகிறேன்
மும்பை அந்தேரியில் உள்ள கோயில் ஒன்றிற்கு நான் சென்றபோது மாதவிலக்கு காரணமாக நான் கோயிலுக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தேன். எனது மகனை மட்டும் பூசாரியிடம் கொடுத்து அனுப்பி பூஜை விஷயங்களை நிறைவேற்றி வருமாறு தெரிவித்தேன். இதுதான் நான் கோயிலுக்கும், மரபுகளுக்கும் வழங்கக்கூடிய மரியாதை. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, பம்பை முதல் சன்னிதானம் வரை போராட்டங்கள் நடைபெற்றதால், மாதவிடாய் சுழற்சி கொண்ட எந்த இளம் பெண்ணும் சபரிமலைக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications