அந்த 4 ரா உளவாளிகள்.. மோடிக்கு தெரியாமல் நடந்த அதிரடி.. ராஜபக்சேவுக்காக செய்த ஆபரேஷன்!
இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்பதற்கு பின் இந்திய உளவு அமைப்பான ராவின் வேலை இருக்கிறது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
டெல்லி: இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்பதற்கு பின் இந்திய உளவு அமைப்பான ராவின் வேலை இருக்கிறது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்திய உளவு அமைப்பின் ரா இதற்கு பின் நிறைய வேலைகளை பார்த்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
கொலை முயற்சியா
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல திட்டமிட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோடிக்கு தெரியாமல்
ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையில் பிரதமர் பொறுப்பில் ராஜபக்சே பதவி ஏற்பதற்கு பின்பும் ரா அமைப்புதான் இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு தெரியாமல் ரா நடத்திய அதிரடி வேலைதான் இந்த பதவி மாற்றம் என்று கூறப்படுகிறது.
ரா மூலம் நடக்கும் வேலை
ஏற்கனவே இலங்கையில் அதிபரின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த 4 ரா உளவாளிகள் செய்த அதிரடி வேலைதான் இது என்று கூட பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இது மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வருகிறது.
யார் இயக்குவது
பிரதமர் மோடிக்கு தெரியாமல் அண்டை நாட்டில் இப்படி ஒரு பெரிய அரசியல் மாற்றம் நடப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராவை வைத்து இப்படிப்பட்ட பணிகளை செய்வது யார், இவர்களுக்கு பின் இருப்பது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இரண்டு நாடுகளின் உறவில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.