ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: ஜனாதிபதி மாளிகையில் துப்புரவு பணியாளரின் உறவினர் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500 ஐ நெருங்கிவிட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் பணியாளர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு துப்புரவு பணியாளரின் மருமகளின் தாய்க்கு அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.
இதனால் அவரது இறுதிச் சடங்கிற்காக துப்புரவு பணியாளரின் மருமகள் உள்பட உறவினர்கள் வந்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் துப்புரவு பணியாளரின் மருமகளின் தாய்க்கு கொரோனா இருந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் உள்ள 125 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதே பிளாக்கில் உள்ள 25 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications