ச்சீ! "அந்தரங்க உறுப்பை காட்டி!" டெல்லி மெட்ரோவில் பாலியல் தொல்லை! வெலவெலத்து போன பெண்! ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், மெட்ரோ ஸ்டேஷனிலேயே தான் எதிர்கொண்ட கொடூர பாலியல் தொல்லை சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்களும் நடந்தே வருகிறது.

பேருந்து, மெட்ரோ போன்ற பொது இடங்களில் கூட பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 டெல்லி மெட்ரோ

டெல்லி மெட்ரோ

அப்படியொரு சம்பவம் தான் இப்போது டெல்லி மெட்ரோவில் நடந்துள்ளது. தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த தகவலை அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் என்ன கொடுமை என்றால், பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் இரு வேறு இடங்களில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும், இருவரும் அப்பெண்ணுக்கு உதவவில்லை என்பது துரதிருஷ்டவசமானதே!

முகவரி

முகவரி

இந்தச் சம்பவம் குறித்து அப்பெண் தனது ட்விட்டரில், "நான் பொதுவாக ட்வீட் செய்ய மாட்டேன். ஆனால் டெல்லி மெட்ரோவில் இன்று நான் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும். இன்று மஞ்சள் லைனில் பயணம் செய்யும் போது, ஜோர் பாக் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அந்த நபர் என்னிடம் ஒரு முகவரியைக் கேட்டார். நானும் அவருக்கு உதவினேன். ஸ்டேஷனில் டாக்ஸி புக் செய்ய பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.

 பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

அந்த நபர் மீண்டும் ஸ்டேஷனில் என்னிடம் வந்தார். முகவரி என்னிடம் உறுதி செய்ய வந்ததாகத் தெரிவித்தார். அவர் என்னிடம் காட்டிய பைலை வாங்கி பார்த்தேன். அப்போது அவர் திடீரென தனது ஆணுறுப்பை என் முகத்தில் திணிக்க முயல்வதை நான் கவனித்தேன். இதையே அவர் மூன்று முறை செய்ய முயன்றார். இதைக் கவனித்த உடன் நான் பயந்து போனேன். அங்கிருந்த காவலர் ஒருவர் அணுகினேன். ஆனால் அவர் எனக்கு உதவ மறுத்துவிட்டார்.

 சிசிடிவி

சிசிடிவி

இது தொடர்பாக மேலே அலுவலகத்தில் புகார் அளிக்கச் சொன்னார். நான் அங்கும் சென்று புகார் அளித்தேன். நான் பாலியல் தொல்லை அளித்த நபரை அடையாளம் காட்ட சிசிடிவி அறைக்கு அழைத்துச் செல்லச் சொன்னேன். நான் அந்த நபரை அடையாளமும் காட்டினேன். அங்கு நடந்த ஒட்டுமொத்த சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இருப்பினும், அந்த நபர் வேறு ஒரு மெட்ரோ ரயிலில் ஏறிச் செல்வதும் அதில் பதிவாகி இருந்தது.

 குறை கூறினர்

குறை கூறினர்

இதில் எதாவது நடவடிக்கை எடுக்கும்படி அவர்களிடம் கேட்டேன். தவறு செய்தவனைப் பிடிப்பதற்குப் பதிலாக, அவர்கள் என்னையே குறை கூற தொடங்கினர். அந்த இடத்திலேயே சத்தம் போட்டு இருக்க வேண்டும் என்றும் இதில் எதுவும் செய்ய முடியாது என்பது போலக் கூறினர்" என்று பதிவிட்டுள்ளார். இவரது ட்வீட் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்லி, மெட்ரோ நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைப் பலரும் சாடி வருகின்றனர்.

 ரயில் கார்ப்பரேஷன்

ரயில் கார்ப்பரேஷன்

இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கூறுகையில், "சம்பவத்தின் சரியான நேரத்தைத் தெரிவிக்கவும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மெட்ரோ ஊழியர்களிடம் விஷயத்தைத் தெரிவிக்கவும்" என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், தலைநகரிலேயே மெட்ரோ ஸ்டேஷனில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளதாகப் பலரும் சாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+