உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு
டெல்லி: உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடியாக உள்ளது. பிரேசில் நாட்டில் ஒருநாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை ஓய்ந்த நிலையில் சில நாடுகளில் 3-வது அலை தாக்குதல் தொடங்கி இருக்கிறது. அதேபோல் புதியதாக டெல்டா பிளஸ் என்ற கொரோனா வைரஸ் தாக்குதலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தற்போதைய நிலையில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,99,09,683. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,97,349. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16,46,66,496.

பிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பு
பிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2,080 பேர் கொரோனாவால் இங்கு மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,393 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1,129 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் 68,529 பேர் நேற்று கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

கேரளாவில் அதிகம்
இந்தியாவில் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 12,617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 141 பேர் கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தனர். மொத்தம் 11,730 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆகினர்.

தமிழக பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் நேற்று 6,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் 194 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தனர். 11,144 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

மகாராஷ்டிராவில் மரணங்கள் அதிகம்
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை இன்னமும் குறையாமல் உள்ளது. மகாராஷ்டிராவில் ஒருநாள் பாதிப்பு 8470 ஆகவும் ஒருநாள் மரணங்கள் எண்ணிக்கை 482 ஆகவும் இருந்தது. தமிழகத்தில் 9043 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications