உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு
டெல்லி: உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடியாக உள்ளது. பிரேசில் நாட்டில் ஒருநாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை ஓய்ந்த நிலையில் சில நாடுகளில் 3-வது அலை தாக்குதல் தொடங்கி இருக்கிறது. அதேபோல் புதியதாக டெல்டா பிளஸ் என்ற கொரோனா வைரஸ் தாக்குதலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தற்போதைய நிலையில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,99,09,683. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,97,349. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16,46,66,496.

பிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பு
பிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2,080 பேர் கொரோனாவால் இங்கு மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,393 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1,129 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் 68,529 பேர் நேற்று கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

கேரளாவில் அதிகம்
இந்தியாவில் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 12,617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 141 பேர் கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தனர். மொத்தம் 11,730 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆகினர்.

தமிழக பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் நேற்று 6,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் 194 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தனர். 11,144 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

மகாராஷ்டிராவில் மரணங்கள் அதிகம்
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை இன்னமும் குறையாமல் உள்ளது. மகாராஷ்டிராவில் ஒருநாள் பாதிப்பு 8470 ஆகவும் ஒருநாள் மரணங்கள் எண்ணிக்கை 482 ஆகவும் இருந்தது. தமிழகத்தில் 9043 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications