ஹரியானா: பாஜகவுக்கு குத்து கன்பார்ம்- ராகுலுடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், புனியா சந்திப்பு!
டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது ஹரியானாவில் பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜகவுக்கு சொற்பமான இடங்கள்தான் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ பாஜகவுக்கு அந்த சொற்ப இடங்கள் கூட கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. இதனால் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, ஜேஜேபி கட்சி ஆகியவற்றுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது காங்கிரஸ். அதாவது ஹரியானாவில் இருக்கிற அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேர்த்து களமாடுவது என்கிற முனைப்பில் உள்ளார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இதன் அடுத்த கட்டமாக பாஜகவுக்கு எதிராக டெல்லி வீதிகளில் உக்கிரமாகப் போராடிய மல்யுத்த வீரர்களையும் ஹரியானா தேர்தல் களத்தில் காங்கிரஸ் களமிறக்க்வது உறுதியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை திட்டமிட்ட சதியால் பறிகொடுத்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ராகுல் காந்தியுடனான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் சந்திப்பைத் தொடர்ந்துதான் இருவரும் ஹரியானா தேர்தல் களத்திலும் களமாடப் போவது உறுதியாகி இருக்கிறது. இது ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications