2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்... என்னதிது, ராம்தேவ் டப்புன்னு இப்படி சொல்லிட்டாரு!
டெல்லி: 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள யாரும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று ராம்தேவ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்தேவ் என்றால் பல நேரங்களில் சர்ச்சைப் பேச்சுதான். ஏதாவது பேசி விட்டுப் போய் விடுவார். அது காட்டுத் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் தற்போது அவர் பேசியுள்ள பேச்சும் அனலைக் கிளப்பியுள்ளது.

அதாவது 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறியுள்ளார். இதுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் பேசியுள்ள பேச்சின் சில முக்கியப் பகுதிகள்:
இந்த நாட்டில் திருமணமாகாமல் இருக்கும் பிரம்மச்சாரிகளுக்கு நாம் சிறப்பு மரியாதை செய்ய வேண்டும். அதேசமயம் திருமணம் செய்ய முடிவு எடுப்பவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
திருமணம் செய்வோர் அதிகபட்சம் 2 குழந்தைகள் மட்டுமே பெற அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் பெறக் கூடாது. யாருக்காவது 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால அவர்கள் தேர்தலில் வாக்களிக்க தடை செய்ய வேண்டும். அந்த உரிமையைப் பறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராம்தேவ்.
சமீபத்தில் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசுகையில் இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற வேண்டும். அதை கண்டிப்பாக பாலோ செய்ய வேண்டும். அதில் ஒரு குழந்தையை சாதுவாக மாற அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு நேர் மாறாக பேசியுள்ளார் ராம்தேவ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications