ஒகேனக்கல் நீர்வரத்து 57,000 கனஅடியாக அதிகரிப்பு.. அருவிகளில் வெள்ளம்.. சுற்றுலா பயணிகளுக்கு தடை
தருமபுரி: கர்நாடகாவில் கனமழை அதிகரித்துள்ளதால் அங்குள்ள அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் மூன்றாம் நாளாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆறு பிறந்து தமிழகத்தின் வழியாக கடலை சேர்கிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

அதாவது குடகு, மைசூர், மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு 80 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது இந்த உபரிநீரானது தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலூவிற்கு வரத் தொடங்கியது .
இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரத்து கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் மூன்றாம் நாளாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு தடை விதித்துள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் நீர்வளத்துறை துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா தலத்தில் ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து பெய்யும் கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் மேகதாது, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியின் துணை நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications