மகாராஷ்டிராவில் இருந்து தப்பிய மாவோயிஸ்ட்.. தருமபுரியில் மேஸ்திரி வேடத்தில் இருந்தபோது கைது
தருமபுரி: மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட இளைஞர் மகாராஷ்டிராவிலிருந்து தப்பி தமிழகத்தின் பாப்பிரெட்டிப்பட்டியில் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் மகாராஷ்டிரா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Recommended Video

மகாராஷ்டிரா மாநிலம் பங்காரப்பேட்டையை சேர்ந்தவர் செட்டே என்கிற சீனிவாச முல்லாகெவுடு (23). இவர் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகளுக்கு தனது கைப்பையில் வெடிகுண்டு சப்ளை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செட்டே, அந்த வெடிகுண்டு வழக்கில் அங்கிருந்து தப்பி வந்து திருப்பூரில் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி மாருதி நகரில் சிவக்குமார் என்பவரது வீட்டில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

செல்போன் டவர்
இதை அவரது செல்போன் டவரை வைத்து மகாராஷ்டிரா போலீஸார் கண்டறிந்தனர். செட்டேவை கைது செய்ய தமிழக போலீஸாரின் உதவியை மகாராஷ்டிரா போலீஸார் நாடினர். இதற்காக ஏ.பள்ளிப்பட்டி போலீஸாருக்கு செட்டே குறித்த தகவல்களை கொடுத்தனர்.

அடைக்கலம்
அதன்பேரில் தமிழக போலீஸார் விரைந்து சென்று சிவக்குமார் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு வீட்டில் பதுங்கியிருந்த செட்டேவை உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது குறித்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

உறவினர் வீடு
தனது மனைவியின் உறவினர் கோயில் திருவிழாவிற்கு அழைத்ததன் பேரில் சிவக்குமார் வீட்டில் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. அவரிடம் தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் விசாரணை நடத்தினார். இதையடுத்து பலத்த போலீஸார் பாதுகாப்புடன் மகாராஷ்டிரா அழைத்து செல்லப்பட்டார்.

பரபரப்பு விசாரணை
செட்டேவுக்கு அஞ்சலி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். மாவோயிஸ்ட் ஒருவர் இத்தனை நாட்களாக தமிழகத்தில் தங்கி மேஸ்திரி வேடத்தில் இருந்தது அதிர்ச்சி அளித்தது. அவருடன் அவருடைய கூட்டாளிகள் யாரேனும் தமிழகத்தில் தங்கியுள்ளனரா என்பது குறித்தும் அவர்களது திட்டம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தருமபுரியிலும் திருப்பூரிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யாராக இருந்தாலும் அதிலும் குறிப்பாக சந்தேகத்திற்கு இடமான வகையில் யார் இருந்தாலும் அவர்களுடைய பின்புலத்தை அறிந்து கொண்டு பணி வழங்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications