தருமபுரியில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை.. 14 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏழுகுண்டூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த யானை 14 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

Recommended Video

    50 அடி ஆழத்தில் யானை... பரபரக்கும் மீட்பு பணி காட்சிகள் - வீடியோ

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் குறைந்த நிலையில் கிணறு ஒன்று உள்ளது.

    மீட்கும் பணி

    மீட்கும் பணி

    இந்த கிணறு வழியாக உணவு தேடி வந்த பெண் யானை கிணற்றில் அதிகாலை விழுந்தது. யானையின் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கிரேன் மூலம் யானை

    கிரேன் மூலம் யானை

    அந்த கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. கயிறுகளை கட்டி யானையை கிரேன் மூலம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்றது . எனினும் அது முடியவில்லை. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் கொண்டு வடிக்கலாம் என திட்டமிடப்பட்டது.

    மின்சாரம்

    மின்சாரம்

    ஆனால் கிணற்றுக்குள் மோட்டாரை இறக்கினால் யானை தெரியாமல் அதில் தட்டிவிட்டால் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. இதனால் முதலில் யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டது. ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக யானை மயங்கியது. அதன்பின் மீட்பு பணிகள் வேகமாக செய்யப்பட்டது.

    யானை விழுந்தாலும்

    யானை விழுந்தாலும்

    தொடர் முயற்சிக்கு பின்அந்த பெண் யானை 14 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. வனத்துறை முயற்சியில், மக்களின் உதவியுடன் அந்த யானையை கயிறு கட்டி மேலே கொண்டு வந்து உயிருடன் மீட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+