சோதனை என 18 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய 17 பேர்.. வாச்சாத்தியில் ஐகோர்ட் நீதிபதி விசாரணை
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி எனும் கிராமத்தில் மலை வாழ் மக்கள் வசித்து வரும் நிலையில் சந்தன மரம் கடத்தி வைத்துள்ளதாக வீடு வீடாக சோதனை நடத்திய அரசு அதிகாரிகள் துன்புறுத்தல் செய்தனர்.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சோதனை என்ற பெயரில் 18 பெண்களுக்கு பாலியால் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறி வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என 17 பேருக்கு தர்மபுரி நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதிபதி வேல்முருகன் இன்று நேரடியாக வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களிடம் அவர் நேரில் விசாரித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி எனும் மலைக்கிராமம் உள்ளது. இங்கு மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் அந்த கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

18 பேருக்கு பாலியல் தொல்லை
இந்த சோதனையின்போது அவர்கள் அங்கு வசிக்கும் ஆண்கள், பெண்களை தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. கடந்த 1992ல் நடந்த இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சிபிஐ விசாரணை
இதனால் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரினர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு சிபிஐ வசம் சென்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

17 பேருக்கு தண்டனை
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என 17 பேரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே தண்டனைகள் வழங்கப்பட்டது. அதன்படி 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தலா ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி நேரடி விசாரணை
இவர்கள் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வழக்கின் உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதாக வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை மேற்கொள்வதாக நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அதன்படி இன்று நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட 18 பெண்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications