Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெலிவரி பாய்ஸ், வீட்டு பணிவேலை செய்வோரா? உங்களுக்கும் பிஎஃப் இருக்கே! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யும் தொழிலாளர்களும் ஈஎஸ்ஐ மற்றும் பிஎஃப் திட்டத்தில் பயன்பெறலாமே! எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் (GIG) (Delivery Boys) (ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படும்) மற்றும் வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் (ISM- Inter State Migrant Workers) மற்றும் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் (DOME Domestic Workers) மேற்படி தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அதிகளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

esi pf tamil nadu

இம்முகாமில் மேற்கண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் மட்டும் உறுப்பினர்களாக பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும், ESI/PF பிடித்தம் இல்லாதவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேலும் விண்ணப்பிக்க வரும்போது வயதிற்கான ஆவணம், (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று) ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம், நியமனதாரருக்கான ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் தொழிலாளர்கள் பணிபுரியும் அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களான பதிவு செய்து அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் (கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம்) பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO முக்கிய பங்காற்றுகிறது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இது ஊழியர்களின் முதுமை காலத்தில் யார் தயவையும் நாடாமல் கவுரவமாக வாழ வழிவகுக்கிறது. ஊழியர்கள் பணியின் போதும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பலருக்கு EPFO ​​விதிகளின்படி லாயல்டி-கம்-லைஃப். இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் ரூ.50,000 வரை இலவசமாக பெறலாம்.

அதாவது, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போதும் அதே பிஎஃப் கணக்கில் பங்களிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரே பிஎஃப் கணக்கில் பங்களித்த பிறகு லாயல்டி-கம்-லைஃப் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர். 20 ஆண்டுகளாக ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்தி வருபவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+