தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே.. நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கையில் தகவல்!
தருமபுரி: தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனமுடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சிங்காரவேலன் கமிஷன் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் பட்டியலின இளைஞர் இளவரசன். அதே பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீவைத்தல் போன்ற சம்பவங்களும் நடந்தன.

இளவரசன்
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக திவ்யா கூறியதை அடுத்து அவர் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கமிஷன்
அவரை யாரோ கொலை செய்து தண்டவாளத்தில் வீசிவிட்டதாக கருத்துகள் எழுந்தன. இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
இந்த ஆணையம் இளவரசன் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரை விசாரணை செய்தது. இந்த நிலையில் 5 ஆண்டுகள் முடிவுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்காரவேலன் ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது.

அறிக்கை கூறுவது என்ன
ஆனால் அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையின் தகவல்களை வைத்து இளவரன், திவ்யா பிரிந்து சென்ற மனவருத்தத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையிலும் இளவரசனின் இரு பிரேத பரிசோதனைகளின் அடிப்படையிலும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications