ஒற்றை காட்டு யானையிடமே.. போதையில் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை !
தர்மபுரி: போதையில் ஒற்றை காட்டு யானையை வம்பு இழுத்த மீசை முருகேசனை தர்மபுரி வனத்துறையினர் தட்டி தூக்கி உள்ளனர். ஒகேனக்கல் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக விலங்குகள் மனிதர்கள் போல் யோசிக்காமல் உரிமையாளரையே தாக்கும். மேலும் அருகில் யார் இருந்தாலும் அது பார்க்காது. பாசத்தை காட்டினாலும் கோபத்தில் ஏதாவது செய்து விடும். குறிப்பாக வனவிலங்குகள் என்ன வேண்டுமானாலும் செய்யும்.

அதிலும் குறிப்பாக மூர்க்கத்தன்மை யானையோ மதம் பிடித்தால் அருகிலிருப்பவர்கள் யார் என்ன என்று கூட கவனிக்காது. தூக்கி போட்டு மிதித்து கொன்றுவிடும். பாகன் முதல், அருகில் இருந்து பார்ப்பவர்கள் வரை என பல உயிர்களும் யானை மூலம் பலியாகி வருகிறது. இதனால் தான் வனத்துறை அதிகாரிகள் யானைகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் போதை ஆசாமி ஒருவர், யானை முன் நின்று வம்பிழுப்பது போல் செய்கைகள் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ பரவியது. அவரை தற்போது கைது செய்துள்ளனர். அதாவது தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி அவ்வப்போது பென்னாகரம் - ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் வால்வுகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துவிட்டு சாலையின் அருகில் நிற்கும்.
தற்போது ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு கோடை விடுமுறையை கொண்டாட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பென்னாகரத்தில் இருந்து சில கிலோமீட்டர் அடர் வானப்பகுதிக்குள் செல்லும் போது யானைகள் தென்படும். இந்நிலையில் நேற்று கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சாலையோரம் நின்றதை கண்ட மீசைக்கார சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் யானைக்கு மிக அருகில் சென்று நின்று சாமி கும்பிடுவதும், மண்ணை தொட்டு கும்பிடுவதும், கையை தூக்கி போஸ் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார் .
அப்போது அந்த ஒற்றைக் காட்டு யானை தாக்குவது போல் மிரட்டியும் கூட கண்டு கொள்ளமால் மது போதையில் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஒகேனக்கலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒருவர் அந்த நபரின் செயலை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்த நிலையில், அந்த நபர் யார் என்ன என்று வனத்துறையினர் விசாரித்தனர்.
அப்போது அது பென்னாகரம் அருகே எட்டி குட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பென்னாகரம் வனத்துறையினர் யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசனை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications