பலாத்கார முயற்சியில் படுகாயம்.. பிளஸ் டூ மாணவி பலி.. தருமபுரி அருகே உறவினர்களால் நேர்ந்த கொடுமை
Recommended Video

தர்மபுரி: தருமபுரி அருகே, பாலியல் பலாத்கார முயற்சியின்போது காயமடைந்த பிளஸ் டூ மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள, சிட்லிங் மலை கிராமத்தில் கடந்த 5ம் தேதி பிளஸ் டூ மாணவி ஒருவர் மீது 2 பேர் இணைந்து ரமேஷ் மற்றும் சதீஷ் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காமுகர்கள் இருவருமே சிறுமியின் உறவினர்கள்தான் என்பது கொடுமையாகும்.

பலாத்கார முயற்சியின்போது, தப்பிக்க முயன்ற மாணவியை, சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் பலமாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த மாணவி, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
ஆனால் 5 நாட்கள் கழித்து, சிகிச்சை பலனின்றி அந்த மாணவி இன்று பலியானார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவி தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றபோது இந்த கொடுமைக்கு உள்ளாகினார். இதனிடையே கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், காமுகர்கள் இருவரையும் தேடி வருகிறார்கள்.
மாணவியின், மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால், சிட்லிங் மற்றும் அரூர் சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications