கத்திரிக்காய் விற்க போனாகூட பணத்தை பிடிச்சு வச்சுக்கும்.. அதுக்குபேர் என்ன தெரியுமா.. சீமான் விளாசல்
அரூர் பிரச்சாரத்தின்போது தேர்தல் கமிஷனை சீமான் சரமாரி விமர்சித்துள்ளார்.
தருமபுரி: ''இதுக்கு பேர் வெச்சிருக்காங்க.. என்னன்னு தெரியுமா? தேர்தல் கமிஷன்..ன்னு ஏன்? கமிஷன்.. அதிலேயே இருக்கு.. கத்தரிக்காய் விற்க போனாக்கூட அவங்க பணத்தை பிடிச்சு வெச்சுக்கும்" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்களை அறிவித்ததில் இருந்தே நாம் தமிழர் கட்சி அமர்க்களப்பட்டு வருகிறது.
அதிலும் சீமான் பேச்சு என்றாலே சும்மாவே கூட்டம் கூடும்.. இப்போது பிரச்சாரம் என்பதால் களை கட்டுகிறது. திமுக, அதிமுக என ஒரு கட்சியையும் சீமான் விட்டு வைப்பதில்லை.

அரூர் பிரச்சாரம்
எல்லாரையுமே ஒரு பிடி பிடித்து வருகிறார். இப்போது ஒருபடி மேல போய் தேர்தல் பறக்கும் படை குறித்து விமர்சித்துள்ளார். தருமபுரி தொகுதியில் வேட்பாளரையும் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளரையும் ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் கமிஷன்
அப்போது அவர் பேசியதாவது: ''இதுக்கு பேர் வெச்சிருக்காங்க.. என்னன்னு தெரியுமா? தேர்தல் கமிஷன்..ன்னு ஏன்? கமிஷன்.. அதிலேயே இருக்கு.. அதிலேயே புரிந்துகொள்ளலாம்.

வேடிக்கை பார்க்குது
இந்த பறக்கும் படை என்ன செய்கிறது? கத்தரிக்காய் விற்க போகிறவர், மளிகைக்கடைக்கு போகிறவர், அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு அதுக்கு பணம் கட்ட போறவர், இப்படி இவ்வளவு பேரின் பணத்தையும் பிடித்து கொள்கிறது. ஆனா, ஓட்டுக்கு காசு தந்துட்டு இருக்கிறவரை அமைதியா ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கும்.

நல்லாட்சி
இது ஒரு கேடு கெட்ட தேர்தல் ஆணையம்.. ஓட்டுக்கு பணம் தந்தா யாரும் வாங்காதீங்க.. நாடு போராட்டகளமாக மாறி கொண்டிருக்கிறது.. இந்த நேரத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் சொல்வது மக்களை ஏமாற்றும் முயற்சி.. நேர்மையான, சிறந்த தலைவர்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்'' என்று ஆவேசமாக பேசினார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications