Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனதை புண்படுத்திட்டார்.. எம்பி செந்தில் குமார் மீது நடவடிக்கை தேவை.. பிராமண சமாஜ சங்கம் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: பூமி பூஜை விழாவில் ஆன்மீகத்திற்கு எதிராக செயல்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு தமிழ்நாடு பிராமண சமாஜ சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜ சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில தலைவர் அரிஹர முத்து ஐயர் கலந்து கொண்டு சங்கத்தின் தீர்மானங்கள் ஆகியவற்றை விளக்கி உரையாற்றினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சனாதன தர்மம்

சனாதன தர்மம்

இதனையடுத்து சங்கத்தின் மாநில தலைவர் அரிஹர முத்து ஐயர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சனாதன தர்மத்தை தொடர்ந்து பின்பற்றி செயல்படுவோம். சனாதன தர்மத்திற்கு எந்தவித தடையும், இடையூறும் ஏற்படாத வகையில் மத்திய மாநில அரசுகளின் ஆதரவை கோருவோம்.

 இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

மத்திய அரசின் உத்தரவின் படி சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து முற்பட்ட சமூகத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மாதம் தோறும் மின் அளவீடு கணக்கிட்டு கட்டணத் தொகை வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திமுக எம்பி-க்கு கண்டனம்

திமுக எம்பி-க்கு கண்டனம்

தொடர்ந்து பூமி பூஜை விழாவில் அநாகரிகமான முறையில் பேசி ஆன்மீகத்திற்கு எதிராக செயல்பட்ட தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Recommended Video

    மத்த மதம் எல்லாம் எங்கே? சீறிய செந்தில் குமார் எம்பி.. துணிச்சல்.. திரும்பி பார்த்த வடஇந்தியர்கள்!
    புதிய மாவட்டங்கள்

    புதிய மாவட்டங்கள்

    தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக உள்ள ராமநாதபுரத்தில் இருந்து கமுதியையும், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், கடலூரில் இருந்து விருத்தாசலம், திருவண்ணாமலையில் இருந்து ஆரணி, தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, திண்டுக்கல்லில் இருந்து பழனி ஆகியவற்றை பிரிக்க வேண்டும். இதன்மூலம் 6 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். மேலும் விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+