திமுகவுக்கு வயிற்றெரிச்சல்... திட்டமிட்டு பொய் பரப்புகின்றனர்… அன்புமணி கோபம்
Recommended Video

தர்மபுரி: திமுகவுடன் பாமக சேரவில்லை என்ற வயிற்றெரிச்சலில் திட்டமிட்டு பொய்த் தகவல்களை திமுகவினர் பரப்பி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அன்புமணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , காவிரி உபரி நீர் திட்டத்திற்காக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படவுள்ளதாகவும் இது குறித்து விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.
முன்னதாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவை முதலமைச்சர் நனவாக்கி இருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிப்படையில் ஒரு விவசாயி என்றும் அந்த அடிப்படையில் தான் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications