தர்மபுரி மக்களின் 80 வருட கனவு.. தர்மபுரி -மொரப்பூர் இடையே இணைப்பு ரயில் பாதை.. எப்போது முடியும்?
தர்மபுரி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தர்மபுரிமொரப்பூர் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு 2வது உலக போரின் போது தர்மபுரி மொரப்பூர் இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை பெங்களூர் ரயில் வழித்தடத்தில் அருகருகே இருந்தாலும், தர்மபுரி மக்களுக்கு பெரிய பலன் இல்லாமல் இருக்கிறது. எனவே தர்மபுரி-மொரப்பூர் இடையே இணைப்பு ரயில்பாதை அமைக்கும் பணி எப்போது தொடங்கி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தருமபுரியையும் மொரப்பூரையும் இணைக்கும் 36 கி.மீ நீளமுள்ள அகல ரயில் பாதை தான் தர்மபுரி பகுதி மக்களின் நீண்ட கால கனவு ஆகும். இது இரண்டாம் உலகப் போரின்போது கைவிடப்பட்ட ஒரு பழைய பாதையாகவும், அம்மக்களின் ஏக்கமாகவும் உள்ளது. தர்மபுரி மொரப்பூர் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார்கள். இதையடுத்து தர்மபுரி- மொரப்பூர் இடையே ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2016-17 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு சுமார் ₹358.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மூக்கனூர், செட்டிக்கரை, அளே தருமபுரி, ரெட்டி அள்ளி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதால், ரயில்வே துறை சில குறிப்பிட்ட பகுதிகளில் மாற்று வழித்தடத்தை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் 2023 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூக்கனூர், செட்டிக்கரை, அளே தருமபுரி, ரெட்டி அள்ளி உள்ளிட்ட இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பணிகள் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. இதனால் தான் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டப்பணிகள் நிலம் கையகப்படுத்தும் நிலையிலேயே இன்னும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சென்னை, வேலூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு போக்குவரத்து தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்த ரயில் பாதை இணைப்பு திட்டத்தை விரைவாக தொடங்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். இந்த ரயில் பாதை இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்போது தர்மபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். விவசாய விளை பொருட்களை சரக்கு ரயில்கள் மூலமாக பெருநகரங்களுக்கு எளிதாக எடுத்து செல்வதற்கான போக்குவரத்து வசதி உருவாகும். இதன் மூலம் விவசாயிகள் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை எதார்த்தம் என்னவென்றால், மொத்த நிலத்தில் 134 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் அதனை கையகப்படுத்த வேண்டியுள்ளது. பழைய மீட்டர்கேஜ் பாதை பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படாததால், அதன் நிலங்கள் விவசாய நிலங்களாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறிவிட்டன. இதனால், அதே பாதையில் மீண்டும் அகலப் பாதையை அமைக்கும்போது, குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. தர்மபுரி- மொரப்பூர் இடையே ரயில் பாதை 2028ம் ஆண்டுக்கு பின்னரே பணிகள் நிறைவு பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications