ரஞ்சிதாவை காட்டுக்குள் கூட்டிச் சென்ற ராஜ்குமார்.. மிரண்டுபோன திண்டுக்கல்.. டிரைவர் பரபர வாக்குமூலம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை உயிருடன் எரித்துக் கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கஸ்பா அய்யலூரை சேர்ந்த செந்தில்மணி, டிரைவர். அவருடைய மனைவி ரஞ்சிதா (வயது 26). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த29ம் தேதி அன்று மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு ரஞ்சிதா வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

விசாரணை
இதுகுறித்து பூசாரிப்பட்டியை சேர்ந்த ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சிதாவை தேடி வந்தனர். ரஞ்சிதாவின் செல்போன் எண்ணை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி விசாரணை முடக்கிவிடப்பட்டது.

கள்ளக்காதல்
போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவருடன் ரஞ்சிதா அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. டிரைவரான ராஜ்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

ராஜ்குமார் கைது
இந்நிலையில் ராஜ்குமாரை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜ்குமாருக்கும், ரஞ்சிதாவிற்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரஞ்சிதாவை எரித்துக் கொன்றுவிட்டதாக ராஜ்குமாரை கூறினார். இதையடுத்து ராஜ்குமாரை கைது செய்தோம் என்றார்கள்.

கொலை ஏன்?
ராஜ்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், ரஞ்சிதாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம். கடந்த 29ம் தேதி ரஞ்சிதா உடன் வேடசந்தூர் அருகே காட்டுப்பகுதிக்கு சென்றேன். அங்கு வைத்து எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அப்போது நான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரஞ்சிதா மீது ஊற்றி, உடலில் தீ வைத்து எரித்து கொன்றுவிட்டேன்" என்றார். ராஜ்குமாரின் வாக்குமூலத்தை அடுத்து குறிப்பிட்ட காட்டுப்பகுதிக்கு சென்று தடயங்களை சேகரித்தேன். இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,












Click it and Unblock the Notifications