திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
திண்டுக்கல்: கொரோனா பரவலால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஜல்லிபட்டி என்ற கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திண்டுக்கல் நகரிலும் இரண்டு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரம் பேரை நெருங்கியது. 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 1824 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவையில் 332 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேருக்கு தொற்று உறுதியானது. திருவள்ளூரில் 208 பேருக்கும், திருப்பூரில் 141 பேருக்கும் தஞ்சாவூரில் 108 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல் பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. .திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்தமாக 338 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இரண்டு பகுதிகள்
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர், நாராயணன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதிரடி அறிவிப்பு
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

கூட்டங்கள் நடத்த தடை
இன்று மட்டும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் கோயில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 % இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும்
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications