”அப்படி நடந்தால்..” அரசியலுக்கே நான் முழுக்கு போடுறேன்.. திண்டுக்கல் சீனிவாசன் திடீர் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் தாம் அரசியலைவிட்டே விலகுகிறேன் என அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதி எரியோட்டில் அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டது என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது அத்தனையும் பொய். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் கையெழுத்தே நீட் ரத்து என்றார்கள். இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையா? ஏன் பேனா கிடைக்கவில்லையா? இப்போது எதற்காக கையெழுத்து இயக்கம் நடத்துகிறீர்கள்?

அரசியலை விட்டே விலகுகிறேன்: நீங்கள் பங்கேற்ற காங்கிரஸ் ஆட்சிதானே நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்சநீதிமன்றமே நீட் தேர்வு கட்டாயம் என சொன்ன பிறகு யாரை ஏமாற்ற கையெழுத்து இயக்கம்? அப்படி இந்த கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை நீங்கள் ரத்து செய்துவிட்டால் அரசியலில் இருந்தே விலகுகிறேன். ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் பேசியதில் என்ன தவறு உள்ளது? ஆளுநரை திமுகவினர் இழிவுபடுத்துகின்றனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
சட்டத்தை கையில் எடுத்தால்?: இந்தக் கூட்டத்தில் அதிமுக மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் பேசுகையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டோம். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி நீட் தேர்வு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது அதிமுக அரசு. இப்போது நீங்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை மிரட்டி கையெழுத்து வாங்குகிறீர்கள். அதிமுக தொண்டனும் நினைத்தால் பள்ளிக்குள் சென்று மாணவர்களிடம் நீட் தேர்வு பிரச்சனை முடிந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கையெழுத்து வாங்க முடியும். ஆனால் அதிமுகவினர் சட்டத்தை கையில் எடுக்க மாட்டார்கள்.

அண்ணாவுக்காக கூட்டணியை உதறினோம்: ஆரியம் -திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதற்கு அண்ணா திமுகவை திமுக விமர்சிக்கிறது. ஆனால் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு திமுகதானே மவுனம் காத்தது. அண்ணாவை விமர்சித்த காரணத்தால் பாஜகவுடனான கூட்டணியே வேண்டாம் என உதறி தள்ளியது அண்ணா திமுகதானே. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக 40-க்கு 40 இடங்களைக் கைப்பற்றும். மத்தியில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காது; அப்போது அதிமுகவின் கதவுகளை தட்ட தேடித்தான் வருவார்கள். ஆனாலும் அதிமுகவின் கதவுகள் பாஜகவுக்காக திறக்காது என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications