Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போஸ்டர் மட்டும் போதுமா? ஒரு மாசம் ஆகியும் நன்றி சொல்லாத சச்சிதானந்தம்! அட்டாக்கை ஆரம்பித்த அதிமுக..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பெருவெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தேர்தல் முடிவுகள் வெளி வந்து ஒரு மாதம் ஆகியும் மக்களுக்கு நன்றி சொல்லக் கூட வராமல் வெறும் போஸ்டரோடு நின்று விட்டதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். கடந்த தேர்தலில் மக்களை சந்திக்காததால் சீட்டு மறுக்கப்பட்ட வேலுச்சாமி செய்த தவறை சச்சிதானந்தமும் செய்து வருகிறார் என்கின்றனர் திமுகவினர்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி சிபிஐ எம்-க்கு ஒதுக்கப்பட்டது. யார் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Dindigul Sachithanandam CPI Lok Sabha Election 2024 2024

திமுக அமைச்சர்களான ஐ.பெரியசாமி சக்கரபாணியின் ஆதரவு, நீண்ட நெடிய அரசியல் பயணம், மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவு என சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 44,3933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், 670502 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் 226569 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 112544 வாக்குகள் மட்டுமே பெற்றனர்.

திண்டுக்கல்லில் விவசாயிகளுக்காகவும், பழங்குடியின மக்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார் சச்சிதானந்தம். மேலும் இளம் வயதிலேயே ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தனது வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து சச்சிதானந்தம் சார்பாகவும், கூட்டணி கட்சி சார்பாகவும், திண்டுக்கல் மக்களவை தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து தான் பிரச்சினையே ஆரம்பித்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புதுமுக வேட்பாளரான வேலுச்சாமி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவடைந்த உடன் சில வாரங்கள் கழித்து அவர் பொது மக்களிடம் நன்றி தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு தொகுதி பக்கமே அவர் செல்லவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் தலைகாட்டினார் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டும் இருந்தது.

மேலும் எம்பி யார் என்று பலருக்கு தெரியாத நிலையில் அவர் மீண்டும் போட்டியிட்டால் பெரும் அதிருப்தியை சந்திக்க வேண்டும் என்பதாலேயே கூட்டணி கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதை எடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த சச்சிதானந்தம் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவரது வெற்றிக்கு திமுகவின் இரு அமைச்சர்களும் கூட்டணி கட்சியினரும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சச்சிதானந்தம் மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதை அடுத்து கூட்டணி கட்சியில் தங்களுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை தொகுதி வாரியாக சென்று சச்சிதானந்தம் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் ஒரு நாள் கூட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் திண்டுக்கல் முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில்,"நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட தனக்கு பெருவாரியாக வாக்குகள் அளித்து நான்கு லட்சத்தி 43 ஆயிரத்து 821 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியடைய செய்த அனைத்து வாக்காளர்கள் பெருமக்களுக்கும் நன்றி நன்றி" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை வைத்துதான் தற்போது அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Dindigul Sachithanandam CPI Lok Sabha Election 2024 2024

திமுகவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கனிமொழி உள்ளிட்ட பெரிய அரசியல் தலைவர்கள் கூட வீதி வீதியாக சென்று தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். மேலும் தேர்தலில் தோற்றாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான சௌமியா அன்புமணி, இயக்குனர் தங்கர்பச்சான் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பலரும் நேரடியாக சென்று தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால் கூட்டணி கட்சி ஆதரவோடு வெற்றி பெற்ற சச்சிதானந்தம் வெறும் போஸ்டரோடு நன்றி தெரிவித்திருப்பது கூட்டணி கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எம்பியாக அவர் பதவியேற்றார். ஆனால் சுமார் ஒரு மாதம் திண்டுக்கல்லிலேயே இருந்த நிலையில் சச்சிதானந்தம், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வது கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பது என இருந்தும் ஒரு நாளாவது மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கலாம் என கூட்டணி கட்சியினரே பேசி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர்களை புகைப்படம் எடுத்து அதிமுகவினர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+